உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Nov 27, 2025,06:24 PM IST

டில்லி : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டித்வா புயல் உருவானது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவிய நிலையில் வலுப்பெற்று டித்வா புயலாக உருவாகி உள்ளது. சென்னைக்கு தெற்கில் தென் கிழக்கே சுமார் 700 கி.மீ.தொலைவில் டித்வா புயல் மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் சின்னமானது அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்தது. புயலாக உருவானதை தொடர்ந்து ஏமன் நாடு பரிந்துரைத்த 'டிட்வா’(DITWAH) என பெயர் சூட்டியது இந்திய வானிலை ஆய்வு மையம். 




இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு மிக கனமழை அபாயத்தால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29 ஆம் தேதிக்கு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 48 மணி நேரத்திற்கு டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் எச்சரிக்கை எண் 1 ஐ உயர்த்தியுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்