சென்னை: சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் 60 வகையான பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த புயல் காரணமாக நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததினால், அப்பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு -வடமேற்கில் நகர்ந்து 30ம் தேதி வட தமிழகம், புதுவை மற்றும் ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ., தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நகர்ந்து வருகிறது. வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் இருக்கிறது. டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து 60 கி.மீ., 50 கி.மீ., 25 கி.மீ. என மையம் கொள்ளும்.
நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ. தூரத்தில் புயல் நிவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Short Story: மக்களின் மனம்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!
Tamil Short Story: அழகு கோலம்!
Tamil Poem: மன(தின்)வலி
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
{{comments.comment}}