சென்னை: ஃபெஞ்சல் புயலானது மெதுவாக கரையைக் கடக்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக நேரம் பலத்த மழை பெய்யும். புயல் இரவில் கரையைக் கடக்க ஆரம்பிக்கும். நள்ளிரவில் மிக பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் கொடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மீது தற்போது அடர்த்தியான மேகக் கூட்டம் பரவியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். புயல் மெதுவாக நகருகிறது என்பதால் இந்த நான்கு மாவட்டங்களிலும் அடர்த்தியான மழை, நீண்ட நேரம் பெய்யும் வாய்ப்புள்ளது.
இரவிலிருந்து காலை எட்டரை மணி வரையிலான காலத்தில் 60 முதல் 120 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துல்ளது. அடுத்த 12 முதல் 18 மணி நேரம் முக்கியமானது.
சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் முதல் மகாபலிபுரம் இடையிலான பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் புயல் கரையைக் கடக்கும். எப்போது அது கரையைக் கடக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். அனேகமாக இரவில் கரையைக் கடக்க ஆரம்பித்து நள்ளிரவில் அதாவது டிசம்பர் 1ம் தேதி அதிகாலையில் புயல் கரையைக் கடந்து முடியும். புயல் கரையைக் கடந்து முடியும் வரை கன மழை நீடிக்கும். புயல் மெதுவாக கடந்தால் மழையும் நீடிக்கும்.
இன்று மாலை அல்லது இரவிலிருந்து காற்று வேகம் பிடிக்கும் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் அளவுக்கு காற்று இருக்கும். இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் அடுத்த 12 முதல் 18 மணி நேரம் வரை கன மழை இருக்கப் போகிறது. அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}