புயல் மெதுவாக கரையைக் கடக்கும்.. சென்னையில் கன மழை நீடிக்கும்.. நள்ளிரவில் பலத்த மழை பெய்யும்!

Nov 30, 2024,10:50 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயலானது மெதுவாக கரையைக் கடக்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக நேரம் பலத்த மழை பெய்யும். புயல் இரவில் கரையைக் கடக்க ஆரம்பிக்கும். நள்ளிரவில் மிக பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிரதீப் ஜான் கொடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மீது தற்போது அடர்த்தியான மேகக் கூட்டம் பரவியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். புயல் மெதுவாக நகருகிறது என்பதால் இந்த நான்கு மாவட்டங்களிலும் அடர்த்தியான மழை, நீண்ட நேரம் பெய்யும் வாய்ப்புள்ளது.


இரவிலிருந்து காலை எட்டரை மணி வரையிலான காலத்தில் 60 முதல் 120 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துல்ளது. அடுத்த 12 முதல் 18 மணி நேரம் முக்கியமானது.




சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் முதல் மகாபலிபுரம் இடையிலான பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் புயல் கரையைக் கடக்கும். எப்போது அது கரையைக் கடக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். அனேகமாக இரவில் கரையைக் கடக்க ஆரம்பித்து நள்ளிரவில் அதாவது டிசம்பர் 1ம் தேதி அதிகாலையில்  புயல் கரையைக் கடந்து முடியும். புயல் கரையைக் கடந்து முடியும் வரை கன மழை நீடிக்கும். புயல் மெதுவாக கடந்தால் மழையும் நீடிக்கும்.


இன்று மாலை அல்லது இரவிலிருந்து காற்று வேகம் பிடிக்கும் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் அளவுக்கு காற்று இருக்கும்.  இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் அடுத்த 12 முதல் 18 மணி நேரம் வரை கன மழை இருக்கப் போகிறது. அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்