சென்னை: ஃபெஞ்சல் புயலானது மெதுவாக கரையைக் கடக்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக நேரம் பலத்த மழை பெய்யும். புயல் இரவில் கரையைக் கடக்க ஆரம்பிக்கும். நள்ளிரவில் மிக பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் கொடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மீது தற்போது அடர்த்தியான மேகக் கூட்டம் பரவியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். புயல் மெதுவாக நகருகிறது என்பதால் இந்த நான்கு மாவட்டங்களிலும் அடர்த்தியான மழை, நீண்ட நேரம் பெய்யும் வாய்ப்புள்ளது.
இரவிலிருந்து காலை எட்டரை மணி வரையிலான காலத்தில் 60 முதல் 120 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துல்ளது. அடுத்த 12 முதல் 18 மணி நேரம் முக்கியமானது.
சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் முதல் மகாபலிபுரம் இடையிலான பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் புயல் கரையைக் கடக்கும். எப்போது அது கரையைக் கடக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். அனேகமாக இரவில் கரையைக் கடக்க ஆரம்பித்து நள்ளிரவில் அதாவது டிசம்பர் 1ம் தேதி அதிகாலையில் புயல் கரையைக் கடந்து முடியும். புயல் கரையைக் கடந்து முடியும் வரை கன மழை நீடிக்கும். புயல் மெதுவாக கடந்தால் மழையும் நீடிக்கும்.
இன்று மாலை அல்லது இரவிலிருந்து காற்று வேகம் பிடிக்கும் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் அளவுக்கு காற்று இருக்கும். இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் அடுத்த 12 முதல் 18 மணி நேரம் வரை கன மழை இருக்கப் போகிறது. அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}