சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் மிக கன மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் 30ம் தேதி அரும்பாக்கம் மற்றும் செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை பார்க் செய்ய வேண்டாம் என்று மெட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயலானது நாளை பிற்பகல் வாக்கில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழையானது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மக்களும், அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். சென்னை மெட்ரோ நிறுவனமும் பயணிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இதற்கு முந்தைய அனுபவங்கள் கொடுத்துள்ள படிப்பினையின்படி, செயின்ட் தாமஸ் மெளன்ட் மெட்ரோ மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களின் பார்க்கிங்கில், 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள். வானிலை நிலவரத்திற்கு ஏற்ப இந்த தேதியில் மாற்றங்கள் இருக்கும். அவை பின்னர் அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் என்பதால் இங்கு வாகனங்களைப் பார்க் செய்வதைத் தவிர்க்குமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}