சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் மிக கன மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் 30ம் தேதி அரும்பாக்கம் மற்றும் செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை பார்க் செய்ய வேண்டாம் என்று மெட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயலானது நாளை பிற்பகல் வாக்கில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழையானது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மக்களும், அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். சென்னை மெட்ரோ நிறுவனமும் பயணிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இதற்கு முந்தைய அனுபவங்கள் கொடுத்துள்ள படிப்பினையின்படி, செயின்ட் தாமஸ் மெளன்ட் மெட்ரோ மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களின் பார்க்கிங்கில், 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள். வானிலை நிலவரத்திற்கு ஏற்ப இந்த தேதியில் மாற்றங்கள் இருக்கும். அவை பின்னர் அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் என்பதால் இங்கு வாகனங்களைப் பார்க் செய்வதைத் தவிர்க்குமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}