சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் மிக கன மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் 30ம் தேதி அரும்பாக்கம் மற்றும் செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை பார்க் செய்ய வேண்டாம் என்று மெட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயலானது நாளை பிற்பகல் வாக்கில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழையானது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மக்களும், அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். சென்னை மெட்ரோ நிறுவனமும் பயணிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இதற்கு முந்தைய அனுபவங்கள் கொடுத்துள்ள படிப்பினையின்படி, செயின்ட் தாமஸ் மெளன்ட் மெட்ரோ மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களின் பார்க்கிங்கில், 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள். வானிலை நிலவரத்திற்கு ஏற்ப இந்த தேதியில் மாற்றங்கள் இருக்கும். அவை பின்னர் அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் என்பதால் இங்கு வாகனங்களைப் பார்க் செய்வதைத் தவிர்க்குமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
{{comments.comment}}