டெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய 9 நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஓமன் மற்றும் சவுதி அரேபிய வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி உண்டு என்றாலும், அங்கு 32,000 அடிக்கு கீழ் விமானங்கள் பறக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் சிவில் விமானப் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

அவசர கால மாற்றுத் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், பாதுகாப்பு அபாயங்களை முறையாக மதிப்பீடு செய்யவும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவுரை மார்ச் 28-ம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.
ஏற்கனவே ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் ஈரான் மற்றும் ஈராக் வான்வெளியைத் தவிர்த்து நீண்ட தூர மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுவதால், பயண நேரம் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, விமானிகளின் பணி நேர விதிகளில் டிஜிசிஏ தற்காலிகத் தளர்வுகளை அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!
கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து
வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
செல்போன் ஆத்திச்சூடி
தனிமை!
மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை
வண்ணமாக வரும் வானவில்லே
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
"நீ எங்க வந்திருக்க தெரியுமா?".. (கோடாங்கி.. திகில் தொடர் - 7)
{{comments.comment}}