- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை
எண்பது ஆண்டுகள் தொட்டுவிட்டோம் இன்று சுதந்திர திருநாடு.
எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம் பாரதத் திருநாடு
காந்தியின் கரத்தில் கனிந்தது சத்தியம் கதர் மணம் வீசியது
கட்டுக்கள் உடைந்து களம் இறங்கியது கனவுகள் நனவானது
நேதாஜி நெஞ்சில் தீக்கணலாய் எரிந்ததுநாட்டுப்பற்று
நேருவின் நெஞ்சில் நிமிர்ந்து நின்றது நெடுங்கனவு
பாரதி பாடிய பாரதத் தாயின் பெருமை பாரீர்
பகத்சிங் போன்ற பல வீரர்களின் பலிதம் போற்றீர்.

அறிவியல் விண்ணில் அணுகுண்டு அல்ல
அது அறிவின் விளக்கு
அன்னை பாரதம் காட்டும் சாதனை
அது அண்டம் அளக்க
விவசாயம் செழிக்க விஞ்ஞானம் பெருக விரிந்தது நம் நாடு
வீரம் நிறைக்க கல்வி சிறக்க உயர்ந்தது நம் நாடு
என்பதாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறோம்
எல்லை காக்கும் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்
சாதி மதம் கடந்து நின்று சாதிப்போம் இன்றும்
சுதந்திரத் தாயின் திருப்பாதம் தொட்டு வணங்கிடுவோம் என்றும்
வாழ்க பாரதம் வளர்க பாரதம்
வெல்க பாரதம் உயர்க பாரதம்
புன்னகையில் வெற்றியைக் கொண்டு வா!
ஆடி வெள்ளி மட்டுமல்ல.. பூரமும் கூட.. இன்றைய நாளின் சிறப்புகள்!
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
{{comments.comment}}