கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து

Mar 20, 2026,05:29 PM IST

டெல்லி: ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் நடவடிக்கையைக் கண்டிக்காவிட்டாலும் கூட, ஒரு நாட்டின் தலைவரை இழந்ததற்காக இந்தியா தனது இரங்கலைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஏஎன்ஐ  செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


ஈரான் மற்றும் இந்தியாவுக்கு இடையே நீண்டகால மற்றும் நெருக்கமான நட்பு உறவு உள்ளது. ஈரான் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒரு தலைவர் கொல்லப்பட்டிருக்கும் போது, குறைந்தபட்சம் ஒரு இரங்கல் செய்தியையாவது இந்திய அரசு வெளியிட்டிருக்க வேண்டும். தாக்குதலை நடத்தியவர்களை நாம் கண்டிக்கத் தேவையில்லை, ஆனால் உயிரிழந்தவருக்கு மரியாதை செலுத்துவது நமது ராஜதந்திர மரபு.




மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலில், இந்தியா தனது நிலைப்பாட்டைச் சரியாகக் கையாள வேண்டும். ஈரானுடன் நமக்கு இருக்கும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் இந்தியா காட்டிய மௌனம் வியப்பளிக்கிறது.


இந்தக் கொலைக்குப் பின்னால் யார் இருந்தாலும், அது ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இத்தகைய நிகழ்வுகள் மத்திய கிழக்கில் அமைதியின்மையை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் சசி தரூர் 


மத்திய அரசு கமேனி படுகொலை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு விரிவான அறிக்கையையும் இதுவரை வெளியிடாத நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சசி தரூரின் இந்த விமர்சனம் அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

news

மணாளனின் மாண்புகள்!

news

Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..

அதிகம் பார்க்கும் செய்திகள்