- பாரதிராஜன்
காசேதான் கடவுளடா
அருமையான நகைச்சுவை படம். என்சகோதரி கல்யாணம் 18/6/1972 ல் காஞ்சீபுரத்தில் நடந்தது. நானும் என் சகோதரனும் திருமணத்திற்கு முதல் நாள் , திருமணத்தன்று தொடர்ந்து ஒரே அலைச்சல். திருமணத்திற்கு மறுநாள் காஞ்சிபுரம் ராஜா தியேட்டரில் காசேதான் கடவுளடா திரைப்படம் பார்க்க குரூப் ஆகச் சென்றோம்.
இரவு10/00 மணி காட்சி, டீக்காரரிடம் டீ வாங்கி குடிக்க நினைத்து கீழே வைத்து விட்டோம் திரையில் அப்போது இன்று வந்த இந்த மயக்கம் பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது, இரண்டு நாட்களாக அலைச்சல் காரணமாக சற்றே கண்ணயர்ந்து அதனால் டீ முழுவதும் கீழே கொட்டி டீ கிளாஸ் உடைந்து விட்டது.
டீ பையன் வந்தான் அவனிடம் சொன்னதும், எங்களை கடைக்காரரிடம் கொண்டு போய் தகவல் தெரிவிக்க கடைக்காரர் டீ கிளாஸ் க்கு ரூபாய் 20/-, தரும் படி கேட்க , நான் டீ கூட குடிக்கவில்லை, அதை டீ பையனிடம் சொல்லுங்கள் என்றார்.

பணம் இல்லையா, கையில் கட்டி யிருந்த வாட்சை கழட்டி கொடுத்து விட்டு நாளை காலை பஜாரில் உள்ள ராயல் ஸ்டோரில் வாங்கி கொடுத்து விட்டு வாட்சை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்தார்
வேறு வழியின்றி ரூபாய் 20/+ டீ க்கான காசு கொடுத்து விட்டு வந்தோம். எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் நினைவுக்கு வரும்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
அன்னையைப் போற்று
{{comments.comment}}