Cyclone Fengal: இன்னிக்கு சென்னையில் நேத்து மாதிரியெல்லாம் பெருசா மழை இருக்காது..தமிழ்நாடு வெதர்மேன்

Nov 27, 2024,10:13 AM IST

சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ள நிலையில், நாகை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யக்கூடும். அதே சமயம் சென்னையில் நேற்று பெய்த மழை போல் இன்று பெய்யாது. மிதமான மழைக்கே வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார். 


தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்வதால் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவு வருகிறது. அதே சமயம் சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து நகரமே குளிர்ந்து நடுங்குகிறது. 




நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடல் அலைகள் பெரும் சத்தத்துடன் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதேபோல் திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.


வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தமிழ்நாட்டை நெருங்கும் நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம்,  கல்பாக்கம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பெரும் சத்தத்துடன் 12 உயரம் வரை எழுகின்றது.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 1500 க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். அதன்படி, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலில் அதிக கன மழை பெய்யும். புதுச்சேரியில் மழை பெய்யும்.


சென்னையை பொருத்தவரை நேற்று போல் மழை இருக்காது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளது என  அறிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்