Cyclone Fengal: இன்னிக்கு சென்னையில் நேத்து மாதிரியெல்லாம் பெருசா மழை இருக்காது..தமிழ்நாடு வெதர்மேன்

Nov 27, 2024,10:13 AM IST

சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ள நிலையில், நாகை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யக்கூடும். அதே சமயம் சென்னையில் நேற்று பெய்த மழை போல் இன்று பெய்யாது. மிதமான மழைக்கே வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார். 


தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்வதால் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவு வருகிறது. அதே சமயம் சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து நகரமே குளிர்ந்து நடுங்குகிறது. 




நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடல் அலைகள் பெரும் சத்தத்துடன் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதேபோல் திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.


வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தமிழ்நாட்டை நெருங்கும் நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம்,  கல்பாக்கம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பெரும் சத்தத்துடன் 12 உயரம் வரை எழுகின்றது.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 1500 க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். அதன்படி, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலில் அதிக கன மழை பெய்யும். புதுச்சேரியில் மழை பெய்யும்.


சென்னையை பொருத்தவரை நேற்று போல் மழை இருக்காது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளது என  அறிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சி தந்த அதிர்ச்சி!

news

பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

news

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!

news

இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!

news

பெற்று வளர்த்த தாய்மடி

news

மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)

news

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??

news

ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்

அதிகம் பார்க்கும் செய்திகள்