சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ள நிலையில், நாகை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யக்கூடும். அதே சமயம் சென்னையில் நேற்று பெய்த மழை போல் இன்று பெய்யாது. மிதமான மழைக்கே வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்வதால் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவு வருகிறது. அதே சமயம் சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து நகரமே குளிர்ந்து நடுங்குகிறது.
நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடல் அலைகள் பெரும் சத்தத்துடன் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதேபோல் திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தமிழ்நாட்டை நெருங்கும் நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம், கல்பாக்கம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பெரும் சத்தத்துடன் 12 உயரம் வரை எழுகின்றது.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 1500 க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். அதன்படி, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலில் அதிக கன மழை பெய்யும். புதுச்சேரியில் மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை நேற்று போல் மழை இருக்காது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
{{comments.comment}}