பொறுமையை சோதிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. மெல்ல நகர்கிறது.. இன்றாவது புயலாக மாறுமா?

Nov 28, 2024,09:43 AM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படு தாமதமாகி வருகிறது. இன்று மாலை முதல் நாளை காலைக்குள் ஃபெங்கல் புயலாக அது வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக நகர்ந்து வந்தது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை ஒட்டிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதேசமயம் நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், காரைக்கால், சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து புயல் உருவான பிறகு மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.




ஆனால் திடீரென புயலின்  வேகம் மிக கணிசமாக குறைந்து மாலை நேரத்தில் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரம் வேகம் முற்றிலும் குறைந்து தொடர்ந்து ஆறு மணி நேரமாக ஒரே இடத்தில் நீடித்து வந்தது. இதனால் புயல் உருவாகுவதில் தாமதமானது. இதன் எதிரொலியாக மழையின் அளவு குறைந்து ஒரு சில இடங்களில் மிதமான மழையே பெய்து வந்தது.


இந்த நிலையில் ஃபெங்கல் புயல் குறித்த லேட்டஸ்ட் அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் மிக மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.


இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரியில் இருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 480 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கிலும், நாகைக்கு 310 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது  வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற கூடும் என  கணித்துள்ளது.


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில், சில  சமயம் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் எனவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!

news

SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்

news

சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!

news

இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!

news

திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

news

நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை

அதிகம் பார்க்கும் செய்திகள்