சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படு தாமதமாகி வருகிறது. இன்று மாலை முதல் நாளை காலைக்குள் ஃபெங்கல் புயலாக அது வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக நகர்ந்து வந்தது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை ஒட்டிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதேசமயம் நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், காரைக்கால், சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து புயல் உருவான பிறகு மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென புயலின் வேகம் மிக கணிசமாக குறைந்து மாலை நேரத்தில் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரம் வேகம் முற்றிலும் குறைந்து தொடர்ந்து ஆறு மணி நேரமாக ஒரே இடத்தில் நீடித்து வந்தது. இதனால் புயல் உருவாகுவதில் தாமதமானது. இதன் எதிரொலியாக மழையின் அளவு குறைந்து ஒரு சில இடங்களில் மிதமான மழையே பெய்து வந்தது.
இந்த நிலையில் ஃபெங்கல் புயல் குறித்த லேட்டஸ்ட் அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் மிக மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரியில் இருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 480 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கிலும், நாகைக்கு 310 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற கூடும் என கணித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில், சில சமயம் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}