சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படு தாமதமாகி வருகிறது. இன்று மாலை முதல் நாளை காலைக்குள் ஃபெங்கல் புயலாக அது வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக நகர்ந்து வந்தது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை ஒட்டிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதேசமயம் நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், காரைக்கால், சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து புயல் உருவான பிறகு மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென புயலின் வேகம் மிக கணிசமாக குறைந்து மாலை நேரத்தில் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரம் வேகம் முற்றிலும் குறைந்து தொடர்ந்து ஆறு மணி நேரமாக ஒரே இடத்தில் நீடித்து வந்தது. இதனால் புயல் உருவாகுவதில் தாமதமானது. இதன் எதிரொலியாக மழையின் அளவு குறைந்து ஒரு சில இடங்களில் மிதமான மழையே பெய்து வந்தது.
இந்த நிலையில் ஃபெங்கல் புயல் குறித்த லேட்டஸ்ட் அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் மிக மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரியில் இருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 480 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கிலும், நாகைக்கு 310 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற கூடும் என கணித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில், சில சமயம் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}