சென்னை: ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் புகுந்தால் அதனை அப்புறப்படுத்த தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான ஃபெங்கல் புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. அதே நேரத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, நாகை, திருவள்ளூர்,கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் அடி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூரில் மழையின் அளவு குறைந்துள்ளது. ஏனெனில் புயலின் நகர்வு கடலூரை விட்டு விலகிச் சென்றதால் புயல் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் பரவலாக எல்லா பகுதிகளிலும் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கீழ்த்தலத்தை விட்டு மாடியில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதேபோல் தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்துள்ளதால் நோயாளிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். ஓட்டேரி ஸ்டீபன் சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதிகளில் செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அதே சமயத்தில் மக்கள் நடந்து செல்லவும் முடியாத வகையில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மந்தவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது தவிர தொடர் கனமழை காரணமாக மதுரவாயில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூவம், மதுரவாயல், திருவேற்காடு போன்ற கரையோர பகுதிகளில் வாசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை தொடர்வதால் ஏரிகளும் ஆறுகளும் நிறைந்து மழை நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது.இந்த தண்ணீர் வீடுகளுக்கும் புகுவதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வரும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்தால், 044 -2220 0335 மற்றும் 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள தமிழக அசு அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் தேர்தல் 2025: பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும்.. எக்ஸிட் போல் முடிவுகளில் தகவல்!
SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு?... நயினார் நாகேந்திரன்!
பெண்களின் பாதுகாப்பிற்காக... இளஞ்சிவப்பு ரோந்து வானங்கள் சேவை தொடக்கம்!
வானிலை கொடுத்த அப்டேட்... தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல்.. திமுக ஆட்சி எதற்கு: எடப்பாடி பழனிச்சாமி
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!
தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
{{comments.comment}}