ஃபெஞ்சல் புயலால் கன மழை எதிரொலி.. வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால்.. இந்த நம்பரில் கூப்பிடுங்க!

Nov 30, 2024,03:52 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக  வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் புகுந்தால் அதனை அப்புறப்படுத்த தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான ஃபெங்கல் புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. அதே நேரத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, நாகை, திருவள்ளூர்,கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் அடி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூரில் மழையின் அளவு குறைந்துள்ளது. ஏனெனில் புயலின் நகர்வு கடலூரை  விட்டு விலகிச் சென்றதால் புயல் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் பரவலாக எல்லா பகுதிகளிலும் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 




இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கீழ்த்தலத்தை விட்டு மாடியில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதேபோல் தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்துள்ளதால் நோயாளிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். ஓட்டேரி ஸ்டீபன் சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதிகளில் செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அதே சமயத்தில் மக்கள் நடந்து செல்லவும் முடியாத வகையில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 


மந்தவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.  இது தவிர தொடர் கனமழை காரணமாக மதுரவாயில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூவம், மதுரவாயல்,  திருவேற்காடு போன்ற கரையோர பகுதிகளில் வாசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை தொடர்வதால் ஏரிகளும் ஆறுகளும் நிறைந்து மழை நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது.இந்த தண்ணீர் வீடுகளுக்கும் புகுவதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வரும்  அபாயம் ஏற்பட்டு வருகிறது.  இதனை தடுக்க புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்தால், 044 -2220 0335 மற்றும் 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள தமிழக அசு அறிவுறுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்