மெல்ல நகர்ந்து வரும் புயல் சின்னம்.. நாளை மறுநாள் தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த புயல் சின்னம் நகராமல் ஒரே இடத்தில் நீடித்திருந்ததால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டு மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வந்தது. 



இந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் மீண்டும் நகர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை, நாகை, கன்னியாகுமரி, திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை ஒட்டி உள்ள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டாலும், மாநகர் முழுவதும் தரை காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற உள்ளது. மேலும் இந்த புயல் நாளை மறுநாள் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 20 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . 

 ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் நாளான, 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‌

அதேபோல் ஆந்திராவிலும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் ஆந்திராவுக்கு 29,30 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று மிக கனமழை:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அதிகம் பார்க்கும் செய்திகள்