சென்னை: ஃபெஞ்சல் புயல் வட தமிழ்நாட்டை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில், நாளை பள்ளிக்கு வருவதற்குத் தயாராக இருக்குமாறு சென்னையைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்று தனது மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியிருப்பது அதிர வைத்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதனால் நாளை சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவைக் கூட மூடச் சொல்லி விட்டார்கள்.
பீச் ரோட்டுக்கும் பூட்டு போட்டாச்சு. பூங்காக்களையும் மூட உத்தரவிடப்பட்டு விட்டது. இப்படி அரசு முதல் மக்கள் வரை எல்லோரும் ஒரு பக்கம் பாதுகாப்புக்கு உத்தரவாதங்களை ஏற்படுத்தி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சைதன்யா தனியார் பள்ளி ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளது.

தனது மாணவர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப்பில் அது அனுப்பியுள்ள செய்தியில், பெற்றோர்களே.. நாளை வானிலை சூழலுக்கேற்ப தகவல்கள் அப்டேட் செய்யப்படும். தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அதற்கேற்ப மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கல்விக்கும், ஏற்கனவே திட்டமிட்டவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்படும். அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் காலை 7 மணிக்கு முன்பே அப்டேட் செய்யப்படும். உங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்நோக்கியுள்ளோம் என்று அந்தப் பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை அதி கன மழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகமும் விடுமுறை அறிவித்து விட்டது. யாரும் வெளியே வராதீங்க என்று அரசும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பள்ளி மட்டும் புயலைப் பற்றிக் கவலைப்படாமல் பள்ளிக் கூடத்திற்கு வருவதற்குத் தயாரா இருங்க, பரீட்சை முக்கியம் என்று கூறியிருப்பது வினோதமாக உள்ளது. இந்த அறிவிப்பால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
புயலைப் பத்திப் பயப்படுவோமா.. இல்லை பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு ரெடி செய்வோமா என்று மன உளைச்சலும் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}