Cyclone Fengal to cross near Puducherry.. யாருக்கெல்லாம் நாளை ரெட் அலர்ட்?.. IMD Chennai Update

Nov 29, 2024,09:09 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக இன்று மாலை அவர் அளித்த பேட்டி:


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு 270 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகைக்கு 260 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. 


இது வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் அளவிலும் சில நேரங்களில் 90 km அளவிலும் பலத்தை தரைக்காற்று வீசும்.




மழைப் பொழிவுக்கான வாய்ப்புகள் (எல்லா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மற்றும் பரவலாக மழை பெய்யும்)


29ஆம் தேதி 


(ரெட் அலர்ட்) - செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிக கன மழை பெய்யும் 


(ஆரஞ்ச் அலர்ட்)


சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் அரியலூர் தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.


(எல்லோ அலர்ட்)


திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும்


30ஆம் தேதி 


(ரெட் அலர்ட்)


சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் புதுச்சேரியில் அதிக கனமழை  பெய்யும்.


(ஆரஞ்ச் அலர்ட்)


ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் பெரம்பலூர் அரியலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.


(எல்லோ அலர்ட்)


திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை கரூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும். 


டிசம்பர் 1ஆம் தேதி 


(ஆரஞ்ச் அலர்ட்)


நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை  பெய்யும். 


(எல்லோ அலர்ட்)


கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதி


நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் தேனி திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா

news

தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!

news

கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!

news

Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

news

வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!

news

மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

news

வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்