சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக வலுப்பெற கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழ்நாட்டின் நோக்கி 2 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது இது மட்டுமல்லாமல் பலத்து தரைகாற்று வீசுவதால் கடல் அலைகள் நீண்ட உயரத்திற்கு எழுகின்றன.
இதனால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் முழுமையான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் ஃபெங்கல் புயல் நிலவரம் குறித்த அறிவிப்பு ஒன்றை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:
இன்று காலை 11:30 மணி நிலவரப்படி புயல் சின்னம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 450 கிமீ தொலைவிலும் வட இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இப்புயல் சின்னம் அடுத்த 6 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக மாறுகிறது.
டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது.
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், மாவட்டங்களில் நாளை (நவம் 28) காலைக்குள் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், வட மாவட்டங்களிலும் மாலை முதல் விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம். அவ்வப்போது கனமழையாக இருக்கும். இப்புயல் சின்னம் நவம்பர் 30ம் தேதி சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையே புதுச்சேரி, கடலூரை மையமாக வைத்து கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நவம் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பரவலாக மிக மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் ஹேமச்சந்தர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}