ஆழ்ந்த காற்றழுத்தம் எப்போது புயலாக மாறும்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தரும் விளக்கம் இதுதான்!

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை:  வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக வலுப்பெற கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்துள்ளார்.


தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழ்நாட்டின் நோக்கி  2 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது இது மட்டுமல்லாமல் பலத்து தரைகாற்று வீசுவதால் கடல் அலைகள் நீண்ட உயரத்திற்கு எழுகின்றன. 


இதனால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் முழுமையான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில்  புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




இந்த நிலையில் ஃபெங்கல் புயல் நிலவரம் குறித்த அறிவிப்பு ஒன்றை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:


இன்று காலை 11:30 மணி நிலவரப்படி புயல் சின்னம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 450 கிமீ தொலைவிலும் வட இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இப்புயல் சின்னம் அடுத்த 6 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக மாறுகிறது.


டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது.


நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், மாவட்டங்களில் நாளை (நவம் 28) காலைக்குள் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், வட மாவட்டங்களிலும் மாலை முதல் விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம். அவ்வப்போது கனமழையாக இருக்கும். இப்புயல் சின்னம் நவம்பர் 30ம் தேதி சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையே புதுச்சேரி, கடலூரை மையமாக வைத்து கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதன் காரணமாக நவம் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பரவலாக மிக மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் ஹேமச்சந்தர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்