சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் தற்போது சென்னைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது . சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது மட்டுமல்லாமல் பலத்த காற்று வீசி வருகிறது.
தொடர் மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போதை நிலையில் விநாடிக்கு கிட்டத்தட்ட 5000 கன அடிநீர் அளவுக்கு வந்து கொண்டுள்ளது. காலையில் இது 1000க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி சென்னையில் எவ்வளவு மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது என்ற விவரம்:
சென்னை கத்திவாக்கத்தில் அதிகபட்சமாக 121.2 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. பேசின்பாலத்தில் 94.2 மி.மீட்டர் மழையும், தண்டையார்பேட்டையில் 88.2 மி.மீட்டர் மழையும், சோழிங்கநல்லூரில் 86.4 மி.மீட்டர் மழையும், தண்டையார்பேட்டை ஜிடி மருத்துவமனையில் 85.4 மி.மீட்டர் மழையும், பொன்னேரியில் 83 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல் சென்னை அருகம்பாக்கத்தில் 78.8 சென்டிமீட்டர் மழையும், மணாலியில் 78.6 மி.மீட்டர் மழையும், ஐஸ் ஹவுஸில் 78 மி.மீ மழையும்,சென்னை சென்ட்ரலில் 77.4 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
{{comments.comment}}