ஃபெஞ்சல் புயல் மழை எதிரொலி.. சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரிப்பு

Nov 30, 2024,01:15 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.


ஃபெஞ்சல் புயல் தற்போது சென்னைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது . சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது மட்டுமல்லாமல் பலத்த காற்று வீசி வருகிறது. 




தொடர் மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போதை நிலையில் விநாடிக்கு கிட்டத்தட்ட 5000 கன அடிநீர் அளவுக்கு வந்து கொண்டுள்ளது. காலையில் இது 1000க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர்.


இந்த நிலையில் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி சென்னையில் எவ்வளவு மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது  என்ற விவரம்:


சென்னை கத்திவாக்கத்தில் அதிகபட்சமாக 121.2 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. பேசின்பாலத்தில் 94.2 மி.மீட்டர் மழையும், தண்டையார்பேட்டையில் 88.2 மி.மீட்டர் மழையும், சோழிங்கநல்லூரில் 86.4 மி.மீட்டர் மழையும், தண்டையார்பேட்டை ஜிடி மருத்துவமனையில் 85.4 மி.மீட்டர் மழையும், பொன்னேரியில் 83 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


அதேபோல் சென்னை அருகம்பாக்கத்தில் 78.8 சென்டிமீட்டர் மழையும்,  மணாலியில் 78.6 மி.மீட்டர் மழையும், ஐஸ் ஹவுஸில் 78 மி.மீ மழையும்,சென்னை சென்ட்ரலில் 77.4 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்