சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் தற்போது சென்னைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது . சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது மட்டுமல்லாமல் பலத்த காற்று வீசி வருகிறது.
தொடர் மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போதை நிலையில் விநாடிக்கு கிட்டத்தட்ட 5000 கன அடிநீர் அளவுக்கு வந்து கொண்டுள்ளது. காலையில் இது 1000க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி சென்னையில் எவ்வளவு மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது என்ற விவரம்:
சென்னை கத்திவாக்கத்தில் அதிகபட்சமாக 121.2 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. பேசின்பாலத்தில் 94.2 மி.மீட்டர் மழையும், தண்டையார்பேட்டையில் 88.2 மி.மீட்டர் மழையும், சோழிங்கநல்லூரில் 86.4 மி.மீட்டர் மழையும், தண்டையார்பேட்டை ஜிடி மருத்துவமனையில் 85.4 மி.மீட்டர் மழையும், பொன்னேரியில் 83 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல் சென்னை அருகம்பாக்கத்தில் 78.8 சென்டிமீட்டர் மழையும், மணாலியில் 78.6 மி.மீட்டர் மழையும், ஐஸ் ஹவுஸில் 78 மி.மீ மழையும்,சென்னை சென்ட்ரலில் 77.4 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}