செங்கல்பட்டு/திருவள்ளுர்: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சாங் புயல் வருவதால் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளன. இந்தப் புயலானது, வட மாவட்டங்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஏற்கனவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு அது உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
அதேபோல தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகிறது. இந்தப் புயலானது, நெல்லூர், மசூலிப்பட்டனம் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}