செங்கல்பட்டு/திருவள்ளுர்: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சாங் புயல் வருவதால் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளன. இந்தப் புயலானது, வட மாவட்டங்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஏற்கனவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு அது உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
அதேபோல தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகிறது. இந்தப் புயலானது, நெல்லூர், மசூலிப்பட்டனம் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}