சென்னை: மாமல்லபுரத்தில் நடந்து வரும் இந்திய நடனத் திருவிழாவில் இன்று தசாவதார நிகழ்ச்சி நடன வடிவில் இடம் பெறவுள்ளது.
மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பாக இந்திய நாட்டியத் திருவிழா நடந்து வருகிறது. ஜனவரி 19ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.
தினசரி மாலை 5.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை இந்த நாட்டியத் திருவிழா நிகழ்வுகள் தினசரி நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்று இன்று டாக்டர் சசிகலா வெங்கடேசன் தலைமையிலான நிருத்யகலா வைபவம் சரஸ்வதி நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டிய தசாவதார நிகழ்வு இடம் பெறவுள்ளது. இன்று நடைபெற உள்ள சிறப்பு கலாசார நிகழ்ச்சியில், தசாவதாரம் என்ற ஆன்மிக–பாரம்பரிய கருப்பொருளை மையமாகக் கொண்டு, மாணவிகள் தங்கள் அழகிய நடன நிகழ்வின் மூலம் காட்சிப்படுத்த உள்ளனர்.
இந்த நடன நிகழ்ச்சியில், வி.சக்தி கங்கா, ஆர். திவ்யதர்ஷினி, டி. மலர், பி. தாரணி, எஸ். சஹானா, வி.ஜே.நிரஞ்சனா, எஸ். தேஜஸ்வினி, ஐ.ஷோபாஸ்ரீ, எஸ். கவிநயஸ்ரீ, எஸ். வைஷாலி, ஜி. பவித்ரா ஆகியோர் கலந்து கொண்ட நடன வடிவில் தசாவதாரத்தை கண் முன் கொண்டு வரவுள்ளனர்.
இந்திய கலாசாரத்தின் ஆழமும், பக்தியும், கலை நயமும் ஒன்றிணைந்து பார்வையாளர்களை கவரும் வகையில் இந்த நாட்டிய தசாவதாரம், அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் அசைவுகளும், உணர்வுகளும் தசாவதாரத்தின் அர்த்தத்தை உயிரோட்டமாக வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று நிருத்யகலா வைபவம் சரஸ்வதி நாட்டியாலயா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி
இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
{{comments.comment}}