கவிதை வராவிட்டாலும் எழுது

Aug 16, 2026,11:17 AM IST

- எழுத்து மின்னல் பாத்திமா அப்றா


கவிதை வராவிட்டாலும் எழுது  

எழுதிட்டே இரு  

முதல் வரி கோணலாக இருக்கலாம்  

இரண்டாம் வரி உடைந்து போகலாம்  

ஆனால் பத்தாவது வரியில்  

உன் உயிர் பேச தொடங்கும்  


வார்தைகள் வர மறுத்தாலும் எழுது  

காகிதம் வெறுமையாக இருந்தாலும் எழுது  

ஏனெனில் எழுத்து என்பது பயிர்  

தினம் தினம் நீர் ஊற்றினால் மட்டுமே  

ஒரு நாள் அது கதிர் விடும்  




யாரும் படிக்காவிட்டாலும் எழுது  

யாரும் பாராட்டாவிட்டாலும் எழுது  

உன் எழுத்து உனக்காக  

உன் காயத்திற்கு மருந்தாக  

உன் கனவிற்கு சிறகாக இருக்கட்டும்  


கவிதை வராவிட்டாலும் எழுது  

எழுதிட்டே இரு  

ஒரு நாள் உன் பேனாவில் இருந்து  

காலத்தை வெல்லும் கவிதை பிறக்கும்


[16-08-2026 10:41] Arivu Alagan: 21. திருமண நாள் 

மனம் அறிந்து  

மாலை அணிந்து  

மகிழ்த்திட்ட தருணம். 

 

முகம் சிவந்து  

முறுவல் உதிர்த்து  

முத்தமிட்ட தருணம், 

 

காலம் கனிந்து  

காதல் துளிர்த்து  

கரம்பிடித்த தருணம். 

 

வறுமை கடந்து  

வாழ்க்கை மலர்ந்து  

வாழத் துணிந்த தருணம், 

 

பல்லாண்டு பயணத்தில் 

பார்வையாளராய் இல்லாமல் 

பயணித்த தருணம், 

 

வயதானாலும் வாழ்வை  

நினைவூட்டுகிற நினைவுகளுள் 

நிறைந்திட்டத் திருமண நாள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கவிதை வராவிட்டாலும் எழுது

news

தமிழனென்று சொல்லடா தலை‌ நிமிர்ந்து‌ நில்லடா!

news

கடவுள் ஏன் கல்லானார்?

news

Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!

news

சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???

news

தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!

news

முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்

news

அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

news

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்