கொல்லம்: கட்டிலில் அமர்ந்திருந்த 80 வயது மாமியரை கொடூரமாக தாக்கிக் கொடுமைப்படுத்திய மருமகளை போலீஸார் கைது செய்தனர்.
கேரளா மாநில கொல்லம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுமோள் தாமஸ் 42. இவர் 80 வயதான தனது மாமியார் எலியம்மா வர்கீஸ் என்பவரை அடித்து துன்புறுத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எலியம்மாவுக்கும் மஞ்சுமோளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. எலியம்மாவை மஞ்சுமோள் குழந்தைகள் முன்னிலையில் கீழே தள்ளி விட்டு இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை வீட்டிற்கு அருகே இருந்த கணவரின் நண்பர் வீடியோ எடுது்துள்ளார். வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லுகிற மருமகள், மாமியார் கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில் ஓங்கி முதுகில் அடித்துத் தள்ளுகிறார்.

கதவு நிலைப்படி அருகே போய் எலியம்மா கீழே விழுந்து அழுகிறார். கையில் அடிபட்டு வலித்ததால் தனது கை, கால்களை தடவி விட்டு கொள்கிறார். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து மஞ்சுமோளை போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
எலியம்மாவை, மஞ்சுள் மோள் தாக்கும் கொடூரமான காட்சிகள் அடங்கிய வீடியோ பலரது கண்டனங்களை பெற்றுள்ளது. தான் மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளையும் எலியம்மாவை அடிக்குமாறு தூண்டி விட்டுள்ளார் மஞ்சுள் மோள் என்பதுதான் கொடுமையானது. தன்னை வீடியோ எடுப்பதைப் பார்த்து நக்கலடிக்கும் வகையில் ஆடையைத் தூக்கிக் காட்டியும் அக்கிரமமாக நடந்து கொண்டுள்ளார் மஞ்சு மோள் தாமஸ்.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}