கொல்லம்: கட்டிலில் அமர்ந்திருந்த 80 வயது மாமியரை கொடூரமாக தாக்கிக் கொடுமைப்படுத்திய மருமகளை போலீஸார் கைது செய்தனர்.
கேரளா மாநில கொல்லம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுமோள் தாமஸ் 42. இவர் 80 வயதான தனது மாமியார் எலியம்மா வர்கீஸ் என்பவரை அடித்து துன்புறுத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எலியம்மாவுக்கும் மஞ்சுமோளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. எலியம்மாவை மஞ்சுமோள் குழந்தைகள் முன்னிலையில் கீழே தள்ளி விட்டு இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை வீட்டிற்கு அருகே இருந்த கணவரின் நண்பர் வீடியோ எடுது்துள்ளார். வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லுகிற மருமகள், மாமியார் கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில் ஓங்கி முதுகில் அடித்துத் தள்ளுகிறார்.
கதவு நிலைப்படி அருகே போய் எலியம்மா கீழே விழுந்து அழுகிறார். கையில் அடிபட்டு வலித்ததால் தனது கை, கால்களை தடவி விட்டு கொள்கிறார். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து மஞ்சுமோளை போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
எலியம்மாவை, மஞ்சுள் மோள் தாக்கும் கொடூரமான காட்சிகள் அடங்கிய வீடியோ பலரது கண்டனங்களை பெற்றுள்ளது. தான் மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளையும் எலியம்மாவை அடிக்குமாறு தூண்டி விட்டுள்ளார் மஞ்சுள் மோள் என்பதுதான் கொடுமையானது. தன்னை வீடியோ எடுப்பதைப் பார்த்து நக்கலடிக்கும் வகையில் ஆடையைத் தூக்கிக் காட்டியும் அக்கிரமமாக நடந்து கொண்டுள்ளார் மஞ்சு மோள் தாமஸ்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}