கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று, பசுமை பூங்கா மற்றும் திருக்குறள் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது திருவள்ளுவர் தமிழின் அடையாளம், அவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, 133 அடி திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வரும் ஜனவரி 1 ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்றும் இன்றும் என 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு வந்த முதல்வர் மு க ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையின் தோரண வாயிலில் பேரறிவு சிலை என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்து , வெள்ளி விழா நிகழ்ச்சியை தொடங்கினார். பின்னர் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில், ரூ.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, மற்றும் திமுக நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து இந்த கண்ணாடி பாலம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
அதன் பின்னர், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ள திருவள்ளுவர் மணல் சிற்பத்தை பார்வையிட்ட பிறகு, 11 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள லேசர் ஒளிகாட்சிகளை திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டின் இரண்டாவது நாளான இன்று பசுமை பூங்கா, மற்றும் திருக்குறள் கண்காட்சியை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு அமைய பெற்றுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் கன்னியாகுமரி கடற்கரை சாலையை திருவள்ளுவர் சாலை என பெயர் சூட்டினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், இது எனது வாழ்க்கையில் மிகவும் சிறந்த நாள். கலைஞரின் நீண்ட நாள் கனவுதான் திருவள்ளுவர் சிலை. அவர் செய்த சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். குறளோவியம் கண்டவர் கலைஞர், வள்ளுவர் கோட்டம் அமைத்தார். மயிலாப்பூரில் திருவள்ளுவர் நினைவிடம் அமைத்தார். பேருந்துகளில் குறளை இடம் பெறச் செய்தார். திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தார். இவையெல்லாம் கலைஞர் தமிழ்நாட்டுக்குத் தந்து சென்ற சொத்துக்கள்.
கலைஞர் வழியில் உழைப்பதே எனது கடமை. சில அதிமேதாவிகள் கேட்டார்கள், சிலை அமைத்ததற்கு எதற்கு விழா என்று. திருவள்ளுவர் தமிழின் அடையாளம், உலகின் அடையாளம், நமது மதம் குறல், நமது வழி குறள் நெறி என்றார் பெரியார். வகுப்பறையில் மட்டுமல்லாமல், இல்லங்களில் உள்ளங்களில் திருவள்ளுவர் வர வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா. எனவே நாம் திருவள்ளுவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம்
கன்னியாகுமரி பேரூராட்சி விரைவில் நகராட்சியாக மாற்றப்படும். அதேபோல திருவள்ளுவர் சிலைக்கு புதிதாக 3 படகுகள் வாங்கப்படும். அதில் ஒன்றுக்கு காமராஜர் பெயரும், இன்னொன்றுக்கு மார்ஷல் நேசமணி பெயரும், 3வது படகுக்கு ஜியூ போப் பெயரும் சூட்டப்படும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதையடுத்து தொடர்ந்து 4.9 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர். புதியதாக சுமார் ஒரு கோடியே 45 ஆயிரம் லட்சம் ரூபாயில் திருவள்ளுவர் நிலைய தோரண வாயிலுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இந்தத் தோரண வாயில் கன்னியாகுமரியின் சுற்றுலா மாளிகையின் அருகில் அமைக்கப்பட உள்ளது. மேலும் திருக்குறள் கண்காட்சியையும் திறந்து வைக்க இருக்கிறார் முதல்வர்.
இந்த விழாவின் நினைவாக தினம் ஒரு திருக்குறள் என்ற பெயரில் ஒரு திருக்குறள் மலரையும் வெளியிட்டார். விழாவை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக தூத்துக்குடி விமான நிலையம் செல்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}