அழகிற்கு மொழி எதற்கு?... மிஸ் செளத் ஆப்ரிக்கா பட்டத்தை தட்டிச் சென்ற மாற்றுத்திறனாளி பெண்!

Aug 13, 2024,06:30 PM IST

பிரிட்டோரியா :   தென்னாப்பிரிக்கா நாட்டில் நடந்த மிஸ் செளத் ஆப்ரிக்கா அழகிப் போட்டியில் 28 வயதாகும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அழகி பட்டத்தை தட்டிச் சென்று உள்ளார். அழகிப்பட்டத்தை வென்ற உலகின் முதலாவது மாற்றுதிறனாளி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.


தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் தென்னாப்பிரிக்க அழகிப் போட்டி 2024 சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் பங்கேற்ற 30 பேரில் 9 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் 9 பேருக்கும் ஆகஸ்ட் 10 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 28 வயதாகும் மாற்றுத் திறனாளி பெண் ஆன மியா லி ரூக்ஸ் (Mia le Roux) அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.




சசோல்பர்க் நகரில் பிறந்த மியா, தனக்கு ஒரு வயதாக இருக்கும் போது கேட்கும் திறனை இழந்தார். அதற்கு பிறகு செயற்கை கேட்கும் கருவிகளை வைத்தே அவர் அனைத்தையும் கேட்க துவங்கினார். தென்னாப்பிரிக்கா இன்ஸ்டியூட் ஆஃப் ஸ்போர்ட் சயின்சில் நியூட்ரிசன் சான்றிதழ் கோர்ஸ் படித்தார். பிறகு டிப்ளமோ, பி.காம்., மார்கெட்டிங் பகுதி நேரமாக படித்து, தற்போது மார்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வருகிறார். பகுதி நேரமாக மாடலிங்கும் செய்து வருகிறார். இவர் தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங்கும் படித்து வருகிறார்.


தனக்கு கிடைத்துள்ள அழகிப் பட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மியா, நான் காது கேளாத பெண் என்பதில் பெருமை கொள்கிறேன். எல்லைகளை தகர்த்து எறிவதற்காக நான் பூமிக்கு வந்துள்ளேன் என நம்புகிறேன். அது இன்று நிஜமாகி விட்டது என தெரிவித்துள்ளார்.


மிஸ் செளத் ஆப்ரிக்கா பட்டத்தைப் பெற்றுள்ள மியா லி ரூக்ஸுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்