Depression வலுவடைந்துள்ளது.. காற்றின் வேகம் 30 நாட்ஸ்.. 35 ஆனால் புயலாகும்.. Tamilnadu Weatherman

Nov 29, 2024,10:50 AM IST

சென்னை: வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுடையத் தொடங்கியுள்ளது. காற்றின் வேகம் 30 நாட்ஸ் என்ற அளவை நெருங்கி விட்டது. வழக்கமாக 35 நாட்ஸ் என்ற அளவில் இருந்தால் அதை புயல் என்று சொல்வார்கள் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

அவர் சொல்தைப் பார்த்தால் தற்போதைய ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு மண்டலம் புயலாக மாறக் கூடிய வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவே உணர முடிகிறது. அதாவது கரையை நெருங்கும்போது அது புயலாக மாறி கடக்கக் கூடும் அல்லது புயலாக மாறி கரையை நெருங்கும்போது வலுவிழந்த நிலையில் கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



அதேசமயம் இந்த காற்றழுத்தத்தால் மிகப் பெரிய அளவிலான மழை சென்னை முதல் மரக்காணம் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை வெதர்மேன் பிரதீப் ஜான் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், மேகக் கூட்டம் கூடியிருப்பதைப் பாருங்கள். சிஸ்ட்ம் தற்போது மீண்டும் வலுவடைந்துள்ளது. 30 நாட்ஸ் என்ற அளவை காற்றின் வேகம் நெருங்கியுள்ளது. வழக்கமாக 35 நாட்ஸ் இருந்தால் அதை புயல் என்று சொல்வார்கள். தற்போது காற்றுத் தடுப்பு என்பது சற்று குறைந்துள்ளது. இதனால் டிப்ரஷன் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. 35 நாட்ஸ் அளவையும் தாண்டி அது 40 முதல் 45 நாட்ஸ் வரை செல்லவும் கூடும். இப்போது காற்று கூட பிரச்சினை இல்லை. மழைதான். மிகப் பெரிய மழையை எதிர்பார்க்கலாம். இந்த டிப்ரஷன் மிகப் பெரிய மேகக் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வரப் போகிறது.

பிற்பகல் தொடங்கி மாலை, இரவு என்று படிப்படியாக மழை வலுக்க ஆரம்பிக்கும்.  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை தொடங்கி மரக்காணம் வரை மிக கன மழையை எதிர்பார்க்கலாம். 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை இது இருக்கும். குறிப்பாக 30ம் தேதி அதி கன மழையை எதிர்நோக்கலாம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம் என்று சொல்லியுள்ளார் வெதர்மேன்.

புயலாகுதோ இல்லையோ செமத்தியான மழை இருக்கப் போகிறது என்று மட்டும் தெரிகிறது. எனவே பொதுமக்களும் அதற்கேற்ப முன்னேற்பாடுகள், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்