- ஔவை அ.ர.தீபா ரவி
விழிகளில்
விழுந்து
நெஞ்சுக்குள்
நுழைந்தவன்
என்னை
எனக்கே
அறிமுகம்
செய்தவன்
மனமென்னும்
மத்தாப்புச்
சோலையில்
தென்றலவன்
குணமென்னும்
கொண்ட
நற்பண்பில்
கொண்டலவன்

வஞ்சியிவள்
விஞ்சிடவே
வருத்தும்
வாடையவன்
அன்பதனை
அள்ளித்தந்து
அகத்தினில்
அகலாதவன்
வானை
வளைப்பவன்
விண்மீன்கள்
கொய்பவன்
மானாய்த்
துள்ளி
மயிலாய்
ஆடவைப்பவன்
சிலையாய்
எனைச்
செதுக்கும்
சிற்பியவன்
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. அதிமுக அதிரடி வேகம்.. விருப்பமனு விநியோகம் தொடக்கம்!
{{comments.comment}}