எல்லாம் கூறினேனே பெண்ணே!

Sep 08, 2026,02:36 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


காலை வணக்கம் 

மாலை வணக்கம் 

நாளை வணக்கம் 

எல்லாம் கூறினேனே பெண்ணே!


ஒரு காஃபி கொடுக்க 

இன்னுமா தாமதம்? நான் 

கடுந்தவமாய்க்

காத்திருக்கலாமா? 


உனைப் பற்றி 

சிந்து கவி 

சந்தக் கவி 

எல்லாம் பாடினேனே பெண்ணே!




இன்னுமா 

தீரவில்லை 

என் மேல் 

உனக்குள்ள கோபம்?


கதிரவன் 

உச்சி வானத்திற்கு

வந்த பின்னும் காலை உணவு 

வரவில்லையே பெண்ணே? 


என் பசித்திருக்கும் 

வயிறு 

பாவம் இல்லையா 

பெண்ணே! 


சினம் விடுக 

பெண்ணே! எந்தன் 

குணவதியே 

கண்ணே! 


உனை விட்டால் உந்தன் 

மணாளன் எனக்கு

யார் உளரோ?

கூறு நீ என்னவளே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. அதிமுக அதிரடி வேகம்.. விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்