- ஔவை அ.ர.தீபாரவி
கண்கள் இரண்டும் என்றும் கருணை பேசுமே
மனத்தில் பொதுநலம்
புகுந்து
ஆட்சி நடத்துமே..
உதடுகள் மொழியும்
சொற்கள்
யாவும்
மருந்தாகுமே
அன்பின்
மொத்தமும்
அகத்தினில்
அடைக்கலம்
ஆகுமே
மானிடரைக் காக்கவும்
நோயைப்
போக்கவும்
முனைபவளே

தன்னுயிரையும்
துச்சமாக
எண்ணி
பல்லுயிரைக்
காப்பவளே
கடமையே
கருதும்
வெண்ணிற
ஆடையின்
தேவதையே
பசி தாகம்
தூக்கம் தாங்கிய
தாரகையே
அமைதி
பொறுமை
துரிதம்
உன்றன்
அணிகலனே
பெண்ணே
உன்னாலே
உலகம்
ஆரோக்கியம்
காணுதே
ஒவ்வொரு நாளும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்..
(உலக செவிலியர் நாள் சிறப்புக் கவிதைப் போட்டியில் இடம் பெற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!
ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி
பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்
திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்
தமிழே அமுதே!
அன்பின் ஊற்றுக்கண்- அகிலம் காக்கும் தாய்மை
உயிரைக் காக்கும் தோழியே!
கண்நிறைந்த கணவா... கணவனுக்கு ஓர் கடிதம்!
அபரா ஏகாதசி விரதம்.. அளவில்லாமல் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும்!
{{comments.comment}}