டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாதந்தோறும் ஒரு சிறந்த வீராங்கனையை தேர்வு செய்வது ஐசிசியின் வழக்கம். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீராங்கனையாக தீப்தி சர்மாவைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி.
இந்தப் போட்டியில் தீப்தி சர்மாவுடன் மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் 41 வயதான ஜிம்பாப்வேயின் நட்சத்திர வீராங்கனை ப்ரீசியஸ் மாரங்கே ஆகியோரும் களத்தில் இருந்தனர். இவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தீப்தி சர்மா இந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார்.
டிசம்பர் மாதம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடியபோது அசத்தலாக விளையாடியிருந்தார் தீப்தி சர்மா. குறிப்பாக ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒரு நாள் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் தீப்தி சர்மா. அதுதான் அவரை ஐசிசி சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்ய உதவியது.
டிசம்பர் மாதம் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் தீப்தி சர்மா 165 ரன்களைக் குவித்தார். அவரது சராசரி 55 ஆகும். ந்து வீச்சிலும் அவர் 11 விக்கெட்களை வீழ்த்தி கலக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}