டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 10 வருடமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி ஆட்சியைப் பறி கொடுத்தது.
48 இடங்களில் பாஜகவும், 22 இடங்களில் ஆம் ஆத்மியும் வென்றுள்ளன. காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.
வாக்கு எண்ணிக்கை - இறுதி நிலவரம்:
பாஜக | ஆம் ஆத்மி | காங்கிரஸ் |
48 | 22 | 0 |
டெல்லியில் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய முக்கியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. இதில் பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் கடும் போட்டி நிலவியது. 3 முறையாக டெல்லியை ஆண்டு வரும் கட்சியான ஆம் ஆத்மியை வீழ்த்த இந்த முறை பாஜக மிகத் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடியே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எடுத்த எடுப்பிலேயே பாஜக முன்னிலை பெற்றுக் காணப்பட்டது. அதேசமயம், ஆம்ஆத்மி கட்சியும் படு நெருக்கமாக பின் தொடர்நது கொண்டிருந்தது. பின்னர் பாஜகவின் கை ஓங்கத் தொடங்கியது. வேகமாக அது முன்னேற ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம் ஆத்மி ஆட்சியை இழக்குமோ என்ற அளவுக்கு நிலைமை மாறியது. இறுதியில் அபார வெற்றியைத் தொட்டது பாஜக.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி ஆகியோர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பின்னடவைச் சந்தித்து வந்தனர். கடைசியில் கெஜ்ரிவால் தோல்வியுற்றார். அதிஷி வென்றார். மற்ற ஆம் ஆத்மி தலைவர்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}