மக்கள் தீர்ப்பு மகத்தானது.. வளர்ச்சி, நல்லாட்சி வென்றது.. டெல்லி முடிவு குறித்து பிரதமர் மகிழ்ச்சி!

Feb 08, 2025,05:18 PM IST

டெல்லி: மக்கள் தீர்ப்பே மகத்தானது, அனைத்திலும் உயர்ந்தது. வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் வெற்றி கிடைத்துள்ளது என்று டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. கடந்த 27 வருடமாக அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திணறி வந்த பாஜக தற்போது மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளதுடன், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற சக்தியையும் தோற்கடித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:



மக்கள் தீர்ப்பே மகத்தானது. வளர்ச்சி வென்றது, நல்லாட்சி வென்றது. 

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைக் கொடுத்த, டெல்லி சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள். நீங்கள் காட்டிய அன்புக்கும் வழங்கிய ஆசிர்வாதங்களுக்கும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாடுபடுவோம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்துவோம் என்று நாங்கள் உறுதி அளித்துள்ளோம். அத்துடன், வளர்ச்சி அடைந்த இந்தியாவில் டெல்லி முக்கியப் பங்காற்றுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்.

இரவு பகலாக பாடுபட்டு இத்தகைய மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்த பாஜகவினரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.  இப்போது நாம் டெல்லி மக்களுக்காக மேலும் வலிமையுடன் அர்ப்பணிப்புடன் பாடுபட முடியும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்