மக்கள் தீர்ப்பு மகத்தானது.. வளர்ச்சி, நல்லாட்சி வென்றது.. டெல்லி முடிவு குறித்து பிரதமர் மகிழ்ச்சி!

Feb 08, 2025,05:18 PM IST

டெல்லி: மக்கள் தீர்ப்பே மகத்தானது, அனைத்திலும் உயர்ந்தது. வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் வெற்றி கிடைத்துள்ளது என்று டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. கடந்த 27 வருடமாக அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திணறி வந்த பாஜக தற்போது மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளதுடன், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற சக்தியையும் தோற்கடித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:



மக்கள் தீர்ப்பே மகத்தானது. வளர்ச்சி வென்றது, நல்லாட்சி வென்றது. 

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைக் கொடுத்த, டெல்லி சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள். நீங்கள் காட்டிய அன்புக்கும் வழங்கிய ஆசிர்வாதங்களுக்கும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாடுபடுவோம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்துவோம் என்று நாங்கள் உறுதி அளித்துள்ளோம். அத்துடன், வளர்ச்சி அடைந்த இந்தியாவில் டெல்லி முக்கியப் பங்காற்றுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்.

இரவு பகலாக பாடுபட்டு இத்தகைய மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்த பாஜகவினரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.  இப்போது நாம் டெல்லி மக்களுக்காக மேலும் வலிமையுடன் அர்ப்பணிப்புடன் பாடுபட முடியும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

news

"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

news

அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

news

மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

news

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு

news

15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்

news

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்