டெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளது. தேர்தலுக்கு முக்கியமான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டில்லி யூனியன் பிரதேசத்தில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 ஆவது முறையாக இவர் முதல்வராக இருந்து வருகிறார். தற்போது செயலாற்றி வரும் டெல்லியின் 7வது சட்டசபையின் பதவிக் காலம் 2025ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. விரைவில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாகவே தேர்தலுக்கு தயாராக துவங்கி விட்டன அரசியல் கட்சிகள்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி டில்லி வாக்காளர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சிங் சுக்கு, அசோக் கெலாட் உள்ளிட்டோர் இந்த வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர். "பியாரி தீதீ யோஜ்னா" என்ற தலைப்பில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்:
1. டில்லியில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 அவர்களது வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.
2. ராஜஸ்தானத்தை போல் குடிமக்கள் அனைவருக்கும் சுகாதார காப்பீட்டு திட்டம்.
3. டில்லியில் வேலையில்லாத இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான உறுதி திட்டம்.
4. மீண்டும் டில்லியில் ரேஷன் முறை திட்டம் கொண்டு வரப்படும்.
5. டில்லி மக்களுக்கு 400 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}