டெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளது. தேர்தலுக்கு முக்கியமான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டில்லி யூனியன் பிரதேசத்தில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 ஆவது முறையாக இவர் முதல்வராக இருந்து வருகிறார். தற்போது செயலாற்றி வரும் டெல்லியின் 7வது சட்டசபையின் பதவிக் காலம் 2025ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. விரைவில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாகவே தேர்தலுக்கு தயாராக துவங்கி விட்டன அரசியல் கட்சிகள்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி டில்லி வாக்காளர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சிங் சுக்கு, அசோக் கெலாட் உள்ளிட்டோர் இந்த வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர். "பியாரி தீதீ யோஜ்னா" என்ற தலைப்பில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்:
1. டில்லியில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 அவர்களது வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.
2. ராஜஸ்தானத்தை போல் குடிமக்கள் அனைவருக்கும் சுகாதார காப்பீட்டு திட்டம்.
3. டில்லியில் வேலையில்லாத இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான உறுதி திட்டம்.
4. மீண்டும் டில்லியில் ரேஷன் முறை திட்டம் கொண்டு வரப்படும்.
5. டில்லி மக்களுக்கு 400 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து
நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!
வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?
Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!
Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!
{{comments.comment}}