விசாகப்பட்டினம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலதாமதமாக பந்து வீசியதாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 தொடரின் 17ஆவது சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. இதில் டெல்லி அணி 17.2 ஓவர்களில் 106 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இப்போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய டெல்லி அணி மிகவும் மெதுவாக பந்து வீசியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் டெல்லி அணிக்கு 2வது முறையாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி, ஊதியத்தில் 12 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று ஐபிஎஸ் நிர்வாகம் தெரிவித்தது.
இதே போன்று இந்த முறையும் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது 2வது முறை என்பதால் ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அல்லது ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}