மீண்டும் மீண்டுமா.. ஸ்லோ பவுலிங் போட்டதற்காக.. ரிஷப் பந்த்துக்கு ரூ.24 லட்சம் அபராதம்!

Apr 04, 2024,03:06 PM IST

விசாகப்பட்டினம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலதாமதமாக பந்து வீசியதாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 தொடரின் 17ஆவது சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. இதில் டெல்லி அணி 17.2 ஓவர்களில் 106 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இப்போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.




இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய டெல்லி அணி மிகவும் மெதுவாக பந்து வீசியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் டெல்லி அணிக்கு 2வது முறையாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி  20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப்  பந்த் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி, ஊதியத்தில் 12 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று ஐபிஎஸ் நிர்வாகம் தெரிவித்தது.


இதே போன்று இந்த முறையும் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது 2வது முறை என்பதால் ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அல்லது ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்