டெல்லியில் பயங்கரம்... பெண் மீது மோதி.. 13 கி.மீ தூரத்திற்கு உடலை இழுத்துச் சென்ற கார்!

Jan 02, 2023,08:49 PM IST

டெல்லி: டெல்லியில் டூவீலரில் போன பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காருக்குள் சிக்கி அந்தப் பெண்ணின் உடல் கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வட மேற்கு டெல்லியின் காஞ்சவாலா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  20 வயதான இளம் பெண் ஒருவர் நேற்று காலையில் ஸ்கூட்டியில் அப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வேகமாக வந்த மாருதி பொலினோ கார் ஸ்கூட்டி மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டார்.



விபத்தை ஏற்படுத்திய பின்னரும் தொடர்ந்து அந்தக் கார் நிற்காமல் போயுள்ளது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காருக்கு அடியில் சிக்கிய நிலையில் இறந்த பெண்ணின் உடலுடன் அக்கார் நிற்காமல் ஒன்றரை மணி நேரம் போயுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்திற்கு கார் போயுள்ளது. அதிகாலையில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.


இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தாஹியா என்பவர் கூறுகையில், சம்பவத்தைப் பார்த்தால் விபத்து போல தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்திய பின்னர் அந்தப் பெண் அடியில் சிக்கிக் கொண்ட நிலையில் கார் நிற்காமல் போனது. ஒரு சாலையில் யு டர்ன் எடுத்து மீ ண்டும் அதே சாலையில் சென்றது. மீண்டும் மீண்டும் யு டர்ன் எடுத்தது. அதைப் பார்க்கும்போது அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் நடந்த சம்பவம் போல இது தெரிகிறது என்றார்.


விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாஹியா காரை நிறுத்த முயன்றார். ஆனால் அது நிற்கவில்லை. பைக்கை எடுத்துக் கொண்டும் துரத்தியுள்ளார். அதன் பின்னரே போலீஸாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.  தற்போது அந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.


சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்