டெல்லி: டெல்லியில் டூவீலரில் போன பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காருக்குள் சிக்கி அந்தப் பெண்ணின் உடல் கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட மேற்கு டெல்லியின் காஞ்சவாலா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான இளம் பெண் ஒருவர் நேற்று காலையில் ஸ்கூட்டியில் அப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வேகமாக வந்த மாருதி பொலினோ கார் ஸ்கூட்டி மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டார்.
விபத்தை ஏற்படுத்திய பின்னரும் தொடர்ந்து அந்தக் கார் நிற்காமல் போயுள்ளது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காருக்கு அடியில் சிக்கிய நிலையில் இறந்த பெண்ணின் உடலுடன் அக்கார் நிற்காமல் ஒன்றரை மணி நேரம் போயுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்திற்கு கார் போயுள்ளது. அதிகாலையில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தாஹியா என்பவர் கூறுகையில், சம்பவத்தைப் பார்த்தால் விபத்து போல தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்திய பின்னர் அந்தப் பெண் அடியில் சிக்கிக் கொண்ட நிலையில் கார் நிற்காமல் போனது. ஒரு சாலையில் யு டர்ன் எடுத்து மீ ண்டும் அதே சாலையில் சென்றது. மீண்டும் மீண்டும் யு டர்ன் எடுத்தது. அதைப் பார்க்கும்போது அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் நடந்த சம்பவம் போல இது தெரிகிறது என்றார்.
விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாஹியா காரை நிறுத்த முயன்றார். ஆனால் அது நிற்கவில்லை. பைக்கை எடுத்துக் கொண்டும் துரத்தியுள்ளார். அதன் பின்னரே போலீஸாருக்கு அவர் தகவல் கொடுத்தார். தற்போது அந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!
வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
{{comments.comment}}