டெல்லியில் பயங்கரம்... பெண் மீது மோதி.. 13 கி.மீ தூரத்திற்கு உடலை இழுத்துச் சென்ற கார்!

Jan 02, 2023,08:49 PM IST

டெல்லி: டெல்லியில் டூவீலரில் போன பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காருக்குள் சிக்கி அந்தப் பெண்ணின் உடல் கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வட மேற்கு டெல்லியின் காஞ்சவாலா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  20 வயதான இளம் பெண் ஒருவர் நேற்று காலையில் ஸ்கூட்டியில் அப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வேகமாக வந்த மாருதி பொலினோ கார் ஸ்கூட்டி மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டார்.



விபத்தை ஏற்படுத்திய பின்னரும் தொடர்ந்து அந்தக் கார் நிற்காமல் போயுள்ளது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காருக்கு அடியில் சிக்கிய நிலையில் இறந்த பெண்ணின் உடலுடன் அக்கார் நிற்காமல் ஒன்றரை மணி நேரம் போயுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்திற்கு கார் போயுள்ளது. அதிகாலையில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.


இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தாஹியா என்பவர் கூறுகையில், சம்பவத்தைப் பார்த்தால் விபத்து போல தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்திய பின்னர் அந்தப் பெண் அடியில் சிக்கிக் கொண்ட நிலையில் கார் நிற்காமல் போனது. ஒரு சாலையில் யு டர்ன் எடுத்து மீ ண்டும் அதே சாலையில் சென்றது. மீண்டும் மீண்டும் யு டர்ன் எடுத்தது. அதைப் பார்க்கும்போது அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் நடந்த சம்பவம் போல இது தெரிகிறது என்றார்.


விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாஹியா காரை நிறுத்த முயன்றார். ஆனால் அது நிற்கவில்லை. பைக்கை எடுத்துக் கொண்டும் துரத்தியுள்ளார். அதன் பின்னரே போலீஸாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.  தற்போது அந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.


சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்