டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருந்த டாக்டர் உமர் உன் நபி, தற்கொலை தாக்குதல் பற்றி பேசிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று விசாரணையில் சிக்கியுள்ளது.
இந்த வீடியோவில், அவர் தற்கொலை தாக்குதலை "தியாக நடவடிக்கை" என்று நியாயப்படுத்திப் பேசியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 28 பேர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
விசாரணையின் போது கிடைத்த இந்த வீடியோவில், உமர் உன்நபி தனியாக அமர்ந்து, தற்கொலை தாக்குதல் என்ற கருத்தை மிகவும் சாதாரணமாக விளக்கிப் பேசியுள்ளார். அழகான ஆங்கிலத்தில் அவர் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது, தற்கொலை தாக்குதல் என்று பொதுவாக அழைக்கப்படுவது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இதற்கு எதிராக பல முரண்பாடுகளும் ஆட்சேபனைகளும் எழுப்பப்படுகின்றன. ஆனால், இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் இறக்க நேரிடும் என்று நம்பி ஒருவர் மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கை.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறோம் என்று நம்பும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறக்கப் போகிறார் என்ற அனுமானத்திற்கு எதிராகச் செல்கிறார். இல்லையென்றால், நமக்கு ஒரு சூழ்நிலையே இருக்காது என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ, மற்றவர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதப் பாதைக்கு இழுப்பதற்காகவே தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}