டெல்லியின் 3வது பெண் முதல்வர்.. ஆம் ஆத்மியின் முதல் பெண் முதல்வர்.. யார் இந்த அதிஷி?

Sep 17, 2024,06:12 PM IST
டெல்லி: டெல்லியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அதிஷி மார்லெனா  சிங். இவர் டெல்லிக்கு மூன்றாவது பெண் முதல்வர் மட்டுமல்ல, ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராகப் போகும் 3வது தலைவரும் கூட.

இதுவரை அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி),  பகவந்த் மான் (பஞ்சாப்) ஆகிய இருவர் முதல்வர்களாக இருந்துள்ளனர். இவர்களது வரிசையில் 3வது முதல்வராக டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் அதிஷி.





மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பணப்பரிமாற்றம் மாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் சமீபத்தில் ஜாமின் கிடைத்தது‌. இருப்பினும் அவர் முதல்வர் பதவியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இதற்காக டெல்லி முதல்வர் இல்லத்தில் இன்று சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவால் புதிய முதல்வராக அதிஷியை முன்மொழிந்ததைத் தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒருமனதாக  ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்கவுள்ளார்.

யார் இந்த அதிஷி..?





1981 ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் தேதி டெல்லியில் பிறந்தவர் அதிஷி மார்லெனா சிங். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பும் பயின்றுள்ளார். இவருடைய தந்தை விஜய் சிங் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தாய் திரிப்தா சிங். ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி உருவாக்கத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர். அப்போது 2015 ஆம் ஆண்டு முதல் மணீஸ் சோடியாவின் ஆலோசகராக செயல்பட்டவர். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது 47 வயதாகும் அதிஷி  கல்காஜியின் எம்.எல்.ஏ.வாகவும், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதுடன், டெல்லி அரசில் கல்வி, பொதுப்பணித்துறை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் சிறையில் இருந்த காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றி இருந்ததாகவும், இதனால் அதிஷிக்கு கட்சியின் ஆதரவு வலுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்