டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு

Aug 20, 2025,10:33 AM IST

டெல்லி: டெல்லியில் நடந்த மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியின்போது முதல்வர் ரேகா குப்தாவை, குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் சக்காரியா என்ற நபர் திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரேகா குப்தா அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளரா்.


ஜன்சுன்வாய் எனப்படும் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது. அப்போது முதல்வர் ரேகா குப்தா மக்களிடமிருந்து குறைகளைக் கேட்டு மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதல்வரை அணுகி அவரைத் தாக்கினார். மனுதாரர் போல் வேடமிட்டு வந்த அந்த நபரை, முதல்வரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக மடக்கிப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முதற்கட்ட தகவலின்படி, தாக்குதல் நடத்தியவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் சக்காரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.




முதல்வர் ரேகா குப்தா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கமிஷனர் எஸ்.பி.கே.சிங் நேரடி பார்வையில் விசாரணை நடைபெறவுள்ளது.


தாக்குதல் சம்பவத்தை பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான அதிஷியும் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில், கருத்து வேறுபாடுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளி மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்