டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு

Aug 20, 2025,10:33 AM IST

டெல்லி: டெல்லியில் நடந்த மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியின்போது முதல்வர் ரேகா குப்தாவை, குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் சக்காரியா என்ற நபர் திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரேகா குப்தா அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளரா்.


ஜன்சுன்வாய் எனப்படும் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது. அப்போது முதல்வர் ரேகா குப்தா மக்களிடமிருந்து குறைகளைக் கேட்டு மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதல்வரை அணுகி அவரைத் தாக்கினார். மனுதாரர் போல் வேடமிட்டு வந்த அந்த நபரை, முதல்வரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக மடக்கிப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முதற்கட்ட தகவலின்படி, தாக்குதல் நடத்தியவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் சக்காரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.




முதல்வர் ரேகா குப்தா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கமிஷனர் எஸ்.பி.கே.சிங் நேரடி பார்வையில் விசாரணை நடைபெறவுள்ளது.


தாக்குதல் சம்பவத்தை பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான அதிஷியும் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில், கருத்து வேறுபாடுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளி மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்