மது விலக்குக் கொள்கை வழக்கு... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. டெல்லி கோர்ட் உத்தரவு

Jun 20, 2024,08:21 PM IST

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


மது விலக்குக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, அவர் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக உச்சநீதிமன்றம் ஜூன் 2ம் தேதி வரை ஜாமீன் அளித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இதையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.




இந்த நிலையில் கெஜ்ரிவால் தரப்பில் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஜாமீன் கோரி வழக்குத் தொடரப்பட்டது. முன்னதாக கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனால் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் இன்று நீதிபதி நியாய் பிந்து இந்த ஜாமீன் மனுவை விசாரித்து, கெஜ்ரிவாலுக்கு ரூ. 1லட்சம் ரொக்க ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட கோர்ட்டில் கெஜ்ரிவால் நாளையே ஜாமீன் மனுவை சமர்ப்பித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும், தாங்கள் அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வரவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்