மது விலக்குக் கொள்கை வழக்கு... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. டெல்லி கோர்ட் உத்தரவு

Jun 20, 2024,08:21 PM IST

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


மது விலக்குக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, அவர் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக உச்சநீதிமன்றம் ஜூன் 2ம் தேதி வரை ஜாமீன் அளித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இதையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.




இந்த நிலையில் கெஜ்ரிவால் தரப்பில் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஜாமீன் கோரி வழக்குத் தொடரப்பட்டது. முன்னதாக கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனால் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் இன்று நீதிபதி நியாய் பிந்து இந்த ஜாமீன் மனுவை விசாரித்து, கெஜ்ரிவாலுக்கு ரூ. 1லட்சம் ரொக்க ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட கோர்ட்டில் கெஜ்ரிவால் நாளையே ஜாமீன் மனுவை சமர்ப்பித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும், தாங்கள் அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வரவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்