ஆட்டிப்படைக்கும் குளிர்.. டெல்லி சிறைக் கைதிகளுக்கு குளிக்க சுடு தண்ணீர் தர உத்தரவு!

Jan 10, 2023,09:32 AM IST
டெல்லி: டெல்லியில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்குள்ள சிறைக் கைதிகள் குளிப்பதற்கு சுடு தண்ணீர் தர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா உத்தரவிட்டுள்ளார்.



டெல்லி சிறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் துணைநிலை ஆளுநர் சக்ஸேனா தலைமையில் நடந்தது. அப்போது டெல்லியில் நிலவி வரும் கடும் குளிரைத் தொடர்ந்து சிறைக் கைதிகள் நலனுக்கான நடவடிக்கைகள் குறித்து சில உத்தரவுகளை ஆளுநர் பிறப்பித்தார்.

டெல்லி திகார், ரோஹினி மற்றும் மண்டோலியில் உள்ள 16 சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குளிப்பதற்கு சுடு தண்ணீர் தர வேண்டும்.. 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு கம்பளி போர்வை தரப்பட வேண்டும். தற்போது கைதிகளுக்கு மரக்  கட்டில் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வசதியான கைதிகள் சுடுதண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் குளிக்கின்றனர். ஆனால் சாமானியக் கைதிகளால் அது முடியவில்லை என்பதால் அவர்கள் கடும் குளிரில் நடுங்கியபடி பச்சைத் தண்ணீரில் குளிக்கும் நிலை உள்ளது. அல்லது குளிக்காமலேயே இருக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதனால் சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே அனைவருக்கும் சுடு தண்ணீர் தர துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. வெளியில் பனிமூட்டமும் அதிகமாக இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்டும் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்