டெல்லி : டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் அடர் பனிமூட்டம் காரணாக 400 க்கும் அதிகமான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
டெல்லியில் அடர் பனிமூட்டம் காரணமாக மிக மோசமான காலநிலை நிலவுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மிக குறைந்த அளவிலேயே எதிரில் வரும் வாகனங்களை பார்க்க முடிகிற நிலை உள்ளது. டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே நிலையே காணப்படுகிறது. வானத்தை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் விமான சேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்திற்கு வர வேண்டிய 19 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இவற்றில் 13 விமானங்கள் உள்நாட்டு விமானங்கள் என்றும், 4 சர்வதேச விமானங்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 400 க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விமானப் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 45 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக டில்லி விமான நிலையம் அறிவித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனம், தங்களின் விமானங்கள் டில்லிக்கு வருவதையும், டில்லியில் இருந்து புறப்படுவதையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக நேற்று காலை அறிவித்தது. பல விமானங்கள் புறப்படும் நேரம் சரியாக தெரியாததால் விமான பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்திலேயே வாட்டும் குளிரில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள், தங்களின் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமான பயணத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என டில்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டில்லியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மிக அடர்ந்த நிலையில் பனிமூட்டம் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலார்ட் விடுத்துள்ளது.குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியசை தொடலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}