டெல்லி : டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் அடர் பனிமூட்டம் காரணாக 400 க்கும் அதிகமான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
டெல்லியில் அடர் பனிமூட்டம் காரணமாக மிக மோசமான காலநிலை நிலவுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மிக குறைந்த அளவிலேயே எதிரில் வரும் வாகனங்களை பார்க்க முடிகிற நிலை உள்ளது. டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே நிலையே காணப்படுகிறது. வானத்தை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் விமான சேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்திற்கு வர வேண்டிய 19 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இவற்றில் 13 விமானங்கள் உள்நாட்டு விமானங்கள் என்றும், 4 சர்வதேச விமானங்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 400 க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விமானப் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 45 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக டில்லி விமான நிலையம் அறிவித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனம், தங்களின் விமானங்கள் டில்லிக்கு வருவதையும், டில்லியில் இருந்து புறப்படுவதையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக நேற்று காலை அறிவித்தது. பல விமானங்கள் புறப்படும் நேரம் சரியாக தெரியாததால் விமான பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்திலேயே வாட்டும் குளிரில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள், தங்களின் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமான பயணத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என டில்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டில்லியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மிக அடர்ந்த நிலையில் பனிமூட்டம் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலார்ட் விடுத்துள்ளது.குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியசை தொடலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}