டெல்லி: டெல்லியில் கடும் கோடை காலங்களில் பிற்பகலில் பள்ளிக் கூடங்களை மூடி விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் வெப்பமான நகரங்களில் முக்கிய இடத்தில் இருப்பது டெல்லி. கோடை காலங்களில் மிகக் கடுமையான வெயிலும், வறட்சியும் தாண்டவமாடும். மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திப்பார்கள். இந்த நிலையில் வெயில் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டெல்லி பேரிடர் நிர்வாக ஆணையம் இப்போதே கூடி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி கோடைகாலங்களில் பிற்பகலுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெப்ப அலைகள் அதிகம் வீசும் பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களைச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான வெயில் தாக்கக் கூடிய பகுதிகளில் மாடிகளில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வீட்டுக்குள் வெப்பத்தை அதிக அளவில் ஊடுறுவ விடாமல் தடுக்க உதவும்.
இந்த நடவடிக்கைகளைக் கண்காணித்து அமல்படுத் அதிகாரி ஒருவர் விரைவில் அமர்த்தப்படவுள்ளார். அவரது பெயரை மத்திய அரசு அறிவிக்கும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}