டெல்லி: டெல்லியில் கடும் கோடை காலங்களில் பிற்பகலில் பள்ளிக் கூடங்களை மூடி விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் வெப்பமான நகரங்களில் முக்கிய இடத்தில் இருப்பது டெல்லி. கோடை காலங்களில் மிகக் கடுமையான வெயிலும், வறட்சியும் தாண்டவமாடும். மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திப்பார்கள். இந்த நிலையில் வெயில் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டெல்லி பேரிடர் நிர்வாக ஆணையம் இப்போதே கூடி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி கோடைகாலங்களில் பிற்பகலுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெப்ப அலைகள் அதிகம் வீசும் பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களைச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான வெயில் தாக்கக் கூடிய பகுதிகளில் மாடிகளில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வீட்டுக்குள் வெப்பத்தை அதிக அளவில் ஊடுறுவ விடாமல் தடுக்க உதவும்.
இந்த நடவடிக்கைகளைக் கண்காணித்து அமல்படுத் அதிகாரி ஒருவர் விரைவில் அமர்த்தப்படவுள்ளார். அவரது பெயரை மத்திய அரசு அறிவிக்கும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}