சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த பகுதி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு 450 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு 440 கிலோமீட்டர் தெற்கிலும், ஒரிசாவின் கோபால்பூருக்கு 600 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கிலும் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு கடந்த 6 மணி நேரத்தில் 7 km என்ற வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுல்ளது.
ஏற்கனவே 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}