சென்னை வீதிகள் முதல் உலக அரங்கம் வரை பெருமைப்படுத்தியவர் அஸ்வின்.. உதயநிதி ஸ்டாலின்

Dec 19, 2024,05:21 PM IST

சென்னை: சென்னையின் வீதிகள் முதல் உலக அரங்கம் வரை தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள். ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் ஏற்படுத்திய தாக்கம், என்றென்றும் நினைவ கூரப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.  இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஒய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.




நேற்று ஓய்வை அறிவித்த அஸ்வின் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்தார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் சென்னை விமான நிலையத்திற்கே வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள அஸ்வினின் இல்லம் முன்னர் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அஸ்வினின் தந்தை அவரை கட்டி அணைத்து முத்தமிட்டு வாழ்த்தினார்.


இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும்  விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், சென்னை முதல் உலக அரங்கு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்.அஸ்வின், ஒரு கிரிக்கெட் வீரராக உல்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும்,ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்