ஈரோடு தேர்தலை ரத்து செய்யுங்க...தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்த தேமுதிக

Feb 21, 2023,03:01 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், தேர்தலுக்கு தடை கேட்டு அடுத்தடுத்த கட்சிகள் மனு அளித்து வருகின்றன.



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாகவும், அது தொடர்பாக புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கும் வரை தேர்தலை நடத்த அனுமதி வழங்கக் கூடாது. தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்ட கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட், அதை தள்ளுபடி செய்துள்ளது.




இந்நிலையில் ஈரோடு தேர்தலை ரத்து செய்யக் கோரி, தேமுதிக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தேர்தலில் பண பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நெருங்கும் தீபாவளி...தங்கம் வெள்ளி விலை எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

விண்வெளி நாயகா.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று!

news

மும்பை பங்குச் சந்தை.. உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்.. அமெரிக்க பேச்சுவார்த்தை எதிரொலி

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 15, 2025... இன்று மாற்றங்களை காண போகும் ராசிகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்