ஈரோடு தேர்தலை ரத்து செய்யுங்க...தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்த தேமுதிக

Feb 21, 2023,03:01 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், தேர்தலுக்கு தடை கேட்டு அடுத்தடுத்த கட்சிகள் மனு அளித்து வருகின்றன.



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாகவும், அது தொடர்பாக புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கும் வரை தேர்தலை நடத்த அனுமதி வழங்கக் கூடாது. தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்ட கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட், அதை தள்ளுபடி செய்துள்ளது.




இந்நிலையில் ஈரோடு தேர்தலை ரத்து செய்யக் கோரி, தேமுதிக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தேர்தலில் பண பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்