மகா சிவராத்திரி விழா : தமிழகத்தில் முக்கிய கோவில்கள் இன்று இரவு திறந்திருக்கும்!

Feb 18, 2023,11:00 AM IST
சென்னை : மகா சிவராத்திரி விழா இன்று (பிப்ரவரி 18) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். 



வழக்கமாக அனைத்து கோவில்களும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, பகல் பொழுதில் நடை அடைக்கப்படும். பிறகு மாலையில் திறக்கப்பட்டு, இரவு நடை சாத்தப்படுவது வழக்கம். சில கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இரவு தான் நடை சாத்தப்படும். ஆகம விதிப்படி, கோவில்கள் இரவில் நடை சாத்தப்பட வேண்டும். 




ஆனால் மகா சிவராத்திரி நாளில் இரவு நேரத்தில் தான் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. இதனால் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்று மகா சிவராத்திரி என்பதால் பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெற உள்ளது.

எந்த நேரத்தில் எந்த கால பூஜை நடைபெறும் என்ற விபரங்களையும் கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டு வருகின்றனர். திருவண்ணாமலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட முக்கிய சிவ தலங்களில் மலையேறி சென்றும், கிரிவலம் வந்து சிவ வழிபாடு செய்வதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்பட உள்ளதால் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை மற்றும் அர்த்த சாம பூஜைகள், நான்காம் கால மகா சிவராத்திரி பூஜை  நிறைவடைந்த பிறகு, பிப்ரவரி 19 ம் தேதியான நாளை காலை நேரத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் இரவு முழுவதும் திறக்கப்பட்டு, நாளை காலை மாசி தேரோட்டம் நிறைவடைந்த பிறகு பகல் 1 மணிக்கே நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்