நான் வர மாட்டேன்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை.. ரசிகர்கள் ஷாக்!

Feb 27, 2023,10:11 AM IST
சென்னை : விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. 2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பலரின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மூன்று சீசன்கள் நிறைவடைந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.



இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கோமாளியாக இருந்து வருகிறார் மணிமேகலை. இவரது படபடவென்ற பேச்சுக்கு ஃபேன்ஸ் அதிகம். இதனால் இன்ஸ்டாவில் மணிமேகலை போடும் போஸ்டுகளுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவியும்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நானே வருவேன் சுற்றில் தனுஷ் கெட்அப்பில் வந்த போட்டோ ஒன்றை பதிவிட்டு, இனி வர மாட்டேன் என, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மணிமேகலை. நான்காவது சீசனில் இருந்து பாதியிலேயே இவர் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானே வருவேன் கெட்அப்பில் வந்தது தான் குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன். 2019 ம் ஆண்டு முதல் சீசனில் துவங்கி தொடர்ந்து எனக்கு ஆதரவும், அன்பும் அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை, சந்தர்ப்பங்களை என்னால் முடிந்த வரை சரியாக பயன்படுத்தி உங்களை மகிழ்வித்தேன் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சரியான காரணம் என்ன என்பதை மணிமேகலையே விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மணிமேகலை விலகியதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது பற்றிய டாக் தான் சோஷியல் மீடியாவில் தீவிரமாக போய் கொண்டிருக்கிறது.

நடப்பு குக் வித் கோமாளி பல்வேறு குழப்பங்களுடன் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஓட்டேரி சிவா இந்தத் தொடரை விட்டு விலக்கப்பட்டார். அவரால் பல சர்ச்சைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவரை தொடரை விட்டு நீக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதையெல்லாம் நம்பாதீர்கள். மீண்டும் நான் வருவேன் என்று சிவா வீடியோ போட்டிருந்தார். இந்த நிலையில் புகழ் பெற்ற மணிமேகலையே விலகியிருப்பதால்.. குக் வித் கோமாளியில் சம்திங் ராங் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்