"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. விரைவில் வெளிப்படுவார்".. பழ. நெடுமாறன் பரபர தகவல்!

Feb 13, 2023,11:45 AM IST
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அவர் கூறுகையில், தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜபக்ஷே ஆட்சிக்கு எதிராக இலங்கை மக்கள் வெடித்து எழுந்து போராட்டம் நடத்தும் இந்த சூழலில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையாக இருக்கும். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி. 

அவரை பற்றி இதுவரை பரப்பப்பட்ட யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் இது முற்றுப்புள்ளியாக அமையும். தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க உள்ளார். தமிழின மக்களும், உலக தமிழர்களும் ஒன்றுபட்டு அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக இலங்கையை மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.



இந்திய பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தும் அபாய நிலை உள்ளது. இதனால் தமிழக மக்கள், பிரபாகரனுக்கு துணை நிற்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு உள்ளது. அந்த தொடர்பின் மூலம் நான் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது. ஆனால் அவர் விரைவில் வெளிப்படுவார் என தெரிவித்தார்.

2009 ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை ராணுவத்தினரால் பிரபாகரன் கொல்லப்பட்ட இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரனின் மரணத்திற்கு பிறகு இலங்கையில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. விடுதலை புலிகள் இயக்கம் தற்போது இலங்கையில் கிடையாது என்று கூட அந்நாட்டு அரசு கூறி வருகிறது. இந்நிலையில் கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரபாகரன் தற்போதும் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்