"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. விரைவில் வெளிப்படுவார்".. பழ. நெடுமாறன் பரபர தகவல்!

Feb 13, 2023,11:45 AM IST
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அவர் கூறுகையில், தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜபக்ஷே ஆட்சிக்கு எதிராக இலங்கை மக்கள் வெடித்து எழுந்து போராட்டம் நடத்தும் இந்த சூழலில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையாக இருக்கும். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி. 

அவரை பற்றி இதுவரை பரப்பப்பட்ட யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் இது முற்றுப்புள்ளியாக அமையும். தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க உள்ளார். தமிழின மக்களும், உலக தமிழர்களும் ஒன்றுபட்டு அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக இலங்கையை மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.



இந்திய பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தும் அபாய நிலை உள்ளது. இதனால் தமிழக மக்கள், பிரபாகரனுக்கு துணை நிற்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு உள்ளது. அந்த தொடர்பின் மூலம் நான் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது. ஆனால் அவர் விரைவில் வெளிப்படுவார் என தெரிவித்தார்.

2009 ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை ராணுவத்தினரால் பிரபாகரன் கொல்லப்பட்ட இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரனின் மரணத்திற்கு பிறகு இலங்கையில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. விடுதலை புலிகள் இயக்கம் தற்போது இலங்கையில் கிடையாது என்று கூட அந்நாட்டு அரசு கூறி வருகிறது. இந்நிலையில் கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரபாகரன் தற்போதும் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்