நாளை சூரிய புயல் பூமியை தாக்குமா?.. பகீர் கிளப்பும் நாசா

Jul 12, 2023,11:17 AM IST
நியூயார்க் : ஜூலை 13 ம் தேதியான நாளை சூரிய புயல் பூமியை தாக்கலாம் என நாசா எச்சரித்துள்ளது. இது பூமியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சூரிய புயலால் வளி மண்டல அடுக்கில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படலாம் என்றும், வட அமெரிக்காவின் பல பகுதிகள் இந்த சூரிய புயலால் பாதிக்கப்படலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. மைனரான ஜி1 புவிகாந்த புயலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஸ்பேஸ் வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் புவியில் காந்தவியல் தன்மையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவம் சொல்லப்படுகிறது. 



அமெரிக்காவின் வாஷிங்டன், அலாஸ்கா, நியூயார்க், மிச்சிகன், இண்டியானா, மெரிலாந்து உள்ளிட்ட 13 அமெரிக்க மாகாணங்களில் இந்த சூரிய புயலை உணர முடியும். இதனால் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இணையதள சேவையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அது மட்டுமல்ல எலக்ட்ரானிக் மின்னணு சாதனங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

இந்த சூரிய புயலின் தாக்கம் அமெரிக்கா தவிர வேறு எந்தெந்த நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி நாசா எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் காற்றின் தன்மைகளில் மாறுபாடு ஏற்படலாம். அதோடு பூமியின் கிழடுக்கு நீள்வட்ட பாதையில் இருக்கும் செயற்கைக் கோள்களையும் இது பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்