3 வட கிழக்கு மாநிலங்களையும் மொத்தமாக அள்ளியது பாஜக.. மேகலாயாவில் திடீர் திருப்பம்!

Mar 03, 2023,10:59 AM IST
டெல்லி: திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ள பாஜக, மேகலாயாவில் சொற்ப இடங்களில் வெற்றி பெற்ற போதும் கூட பழைய கூட்டாளியான கான்ராட் சங்மாவுடன் மீண்டும் சேர்ந்து கொண்டு அங்கும் ஆட்சியைப் பிடித்துள்ளது.



மேகலாயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் திரிபுரா மாநிலத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. இங்கு பாஜக - ஐபிஎப்டி கூட்டணிக்கு மொத்தம் உள்ள 60 இடங்களில் 33 கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது.




இருப்பினும் கடந்த 2018  தேர்தலில் பாஜகவுக்கு இங்கு தனித்து 36 இடங்களில் வெற்றி கிடைத்திருந்தது. ஐடிபிஎப்டி கட்சிக்கு 8 இடங்கள் கிடைத்திருந்தன. ஆனால் இந்த முறை 11 இடங்கள் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களது இடங்களில் ஓட்டையைப் போட்ட பெருமை பிரத்யுத் கிஷோர் தெப்பர்மாவின் திப்ரா மோத்தா கட்சியையே சேரும். இந்தக் கட்சிக்கு 13 இடங்கள் கிடைத்துள்ளன. முதல் முறையாக தேர்தலை சந்தித்த கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேகலாயா

மேகாலயா மாநிலத்தில் தற்போதைய முதல்வரான கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி - பாஜக கூட்டணிதான் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை பாஜக அங்கு தனித்துப் போட்டியிட்டது.  மொத்தம் உள்ள 60 இடங்களில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், பாஜக தேசிய மக்கள் கட்சிக்கு மொத்தமாக 28 இடங்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானிக்கப்பட்டது.இதுதொடர்பாக சங்மா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசினார். பாஜகவின் ஆதரவும் உடனடியாக கிடைத்ததால் தற்போது  மேகலாயாவிலும் பாஜக கூட்டணி ஆட்சியே அமையவுள்ளது.

மீண்டும் பாஜக - சங்மா கூட்டணி அமைய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ்தான் காரணம். அவர் நேற்றே சங்மாவுடன் குவஹாத்தியில் ரகசிய ஆலோசனை நடத்தி பேசி முடித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். மேகலாயாவில் இடதுசாரி கட்சிகளுக்கும், காங்கிரஸுக்கும் கூட்டாக 14 இடங்கள் கிடைத்துள்ளன.  திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்துள்ளன.

நாகாலாந்தைப் பொறுத்தவரை பாஜகவும் அவர்களது கூட்டாளியான தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கும் மொத்தமாக 37 இடங்கள் கிடைத்துள்ளன. இது கடந்த முறையை விட 7 இடங்கள் கூடுதலாகும். நாகாலாந்தில் முதல் முறையாக ஒரு பெண் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டது இந்த தேர்தலின் சிறப்பம்சமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்