மு.க.ஸ்டாலின் போன கமலாலயம்.. அவர் கொடுத்த "பன்ச்"சை.. அவருக்கே திருப்பிக் கொடுத்த பாஜக!

Feb 22, 2023,12:42 PM IST
சென்னை: திருவாரூர் கமலாலயம் குளத்திற்குப் போன முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து ஒரு புகைப்படம் போட்டார்.. அதற்கு தனது பாணியில் பாஜக பதில் கொடுத்துள்ளது.



முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் போயிருந்தார். அப்போது அங்குள்ள புகழ்பெற்ற கமலாலயம் குளத்திற்குப் போன அவர் அங்கு அமர்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கினார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் போட்டுள்ளார்.



அதில் ஸ்டாலின் கூறுகையில்,  கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.  இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர் என்று கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் போட்ட இந்த டிவீட்டுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது பாணியில் கலகலப்பான பதில் கொடுத்துள்ளார். அவர் போட்டுள்ள பதில் டிவீட்:

'கமலாலயம்' ஒரு கோவில் தான். படிக்கட்டுகளில் அமர்ந்து பாற்கடல் போல் குளம் தோற்றமளிப்பதற்கு காரணம் 'நடுவண்' அரசை திருமாலை போல் காத்து கொண்டிருக்கும்  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். அக் குளத்தில் மிதந்து வரும் நடுவண் அரசின் திட்டங்கள் என்ற அலைகளை படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்கிறீர்கள் என்று அதில் போட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.

ஸ்டாலின் கமலாலயம் குளத்தைப் பற்றி சொல்லி கூடவே "நடுவண்" அரசுக்கும் ஒரு பன்ச் வைத்திருந்தார்.. ஆனால் அந்த "பன்ச்"சை வாங்கி அவருக்கே திருப்பி விட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.. இப்படி ஆரோக்கியமாக "மோதிக்" கொண்டால் நல்லாத்தான் இருக்கு.. எல்லோரும் இப்படி டீசன்ட்டாக சண்டை போடலாமே!

சமீபத்திய செய்திகள்

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்