இல. கணேசன்.. ஜெயலலிதா முரண்டு பிடித்தபோது.. அப்படியே விட்டு விட்டு .. திமுகவைத் தூக்கியவர்!

Feb 13, 2023,10:19 AM IST
சென்னை: ஒரு காலத்தில் தமிழ்நாடு பாஜக தலைவராக வலம் வந்தவர் இல. கணேசன். அவரது காலத்தில்தான் தமிழ்நாட்டு மக்களிடையே சற்று தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது பாஜக. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாஜகவைக் காலை வாரியபோது, அலேக்காக திமுகவுடன் பாஜகவை கூட்டணி சேர வைத்ததில் இல. கணேசனின் பங்கு மிகப் பெரியது.



தமிழ்நாடு நாடு பாஜக தலைவர்களில் மிக முக்கியமானவர் இல. கணேசன். அவர் தலைவராவதற்கு முன்பு வரை இருந்தவர்கள், மேல்மட்ட அளவில்தான் அரசியல் செய்து வந்தனர். ஆனால் பாஜகவை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்ற பெருமைக்குரியவர் இல. கணேசன். இவரது தமிழ் பேச்சு அத்தனை சிறப்பாக இருக்கும். மறைந்த கருணாநிதிக்கு மிகவும் பிடித்த தலைவர். ஜெயலலிதாவுடனும் நெருங்கிய நட்பு வைத்திருந்தவர்.

தமிழ்நாட்டில் தாமரையை மலர வைப்போம் என்று பேசிய தமிழிசை செளந்தரராஜனுக்கு கிட்டத்தட்ட அரசியல் குரு இவர்தான். தீவிரமான ஆர்எஸ்எஸ்காரர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்த இல. கணேசனை தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் அனுப்பி வைத்தது. இதையடுத்து தமிழ்நாடு பாஜகவின் பொதுச் செயலாளராக 2003ம் ஆண்டு வரை இருந்தார். அதன் பின்னர் பாஜக தலைவரானார்.


தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பேசக் கூடிய திறமை படைத்தவர் இல. கணேசன். இவரது காலத்தில்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தனி மவுசு கிடைத்தது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க  இவர்தான் பெரும் முயற்சிகள் எடுத்தார். ஆனால் வாஜ்பாய் அரசு கவிழ ஜெயலலிதாவின் அதிரடி முடிவுகள் காரணமாக அமைய அதனால் பெரும் வருத்தமுற்றார் இல.கணேசன். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்குப் பதிலடி தரும் வகையில் அடுத்து வந்த தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து அதிர விட்டது.

அதேபோல சோ ராமசாமியுடன் இணைந்து பாமகவையும், பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் திமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்து மத்தியில் வாஜ்பாய் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இந்த முயற்சிகளுக்கு இல. கணேசன் முக்கியக் காரணமாக இருந்தார்.

இப்போது உள்ள அரசியல் தலைவர்கள் போல இல்லாமல், தனது காலத்தின் முக்கிய சக்திகளான ஜெயலலிதா, கருணாநிதி, இடது சாரித் தலைவர்கள் என அனைவருடனும் நல்ல நட்பையும், உறவையும் பேணியவர் இல.கணேசன்.  திமுக தலைவர்களின் வாய் ஜாலப் பேச்சுக்களுக்கு சற்றும் குறையாத தமிழ்ப் புலமை கொண்டவர் கணேசன்.

ஜாதியை வைத்து தமிழ்நாட்டு அரசியல் திகழ்ந்தாலும் கூட ஜாதி அரசியலை விரும்பாதவர் இல.கணேசன்.  மிகவும் எளிமையான மனிதரும் கூட. இத்தனை நல்ல விஷயங்கள் இவரிடம் இருந்ததால்தான் இவரது தலைமையில் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தனி அடையாளம் கிடைத்தது. அதன் பின்னர் ராஜ்யசபா எம்.பி. ஆனார். பிறகு மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது நாகாலாந்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.



சமீபத்திய செய்திகள்

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்