இந்தியாவுக்கு எதிராக நாங்கள் பேசவில்லை.. "கைலாசா தூதர்" விஜயப்பிரியா விளக்கம்!

Mar 03, 2023,09:24 AM IST

சென்னை: இந்தியாவுக்கு எதிராக நாங்கள் பேசவில்லை. இந்தியாவை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். நித்தியானந்தாவுக்கும், கைலாசாவுக்கும் எதிராக சில இந்து விரோதிகள் செயல்படுகிறார்கள். அவர்களைத்தான் நாங்கள் குற்றம் சாட்டிப் பேசினோம் என்று "கைலாசா நாட்டின் ஐ.நாவுக்கான நிரந்தரத் தூதர்" விஜயப்பிரியா நித்தியானந்தா விளக்கியுள்ளார்.


பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு மோசடிப் புகார்களில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருக்கிறார் நித்தியானந்தா. இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கைலாசா என்ற தனி நாட்டை நிர்மானித்திருப்பதாக இவர் அறிவித்தபோது பலரும் சிரிப்பாய் சிரித்தனர். ஆனால் ஆச்சரியப்படவும் செய்தனர்.. உண்மையிலேயே இவர் தனி நாடு அமைத்திருக்கிறாரோ என்று.


மார்ச் 03 - இந்த நாளுக்குரிய ஸ்பெஷல் என்ன தெரியுமா ?


ஆனால் விளையாட்டுத்தனமாய் பார்க்கப்பட்ட நிதந்தியானந்தா தற்போது செய்து வரும் செயல்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளன. ஜெனீவாவில் உள்ள ஐ.நா.  கூட்டத்தில் பெரிய கொண்டை போட்ட இவரது பெண் சாமியார்கள் உட்கார்ந்து அதுதொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் போட்டு அதிர வைத்துள்ளனர். 


ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தரத் தூதர் என்று விஜயப்பிரியா நித்தியானந்தாவை டிவிட்டரில் கைலாசா டீம் அறிமுகமும் செய்து வைத்தது. அவர் ஐ.நா. கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவைக்  குறை கூறிப் பேசியதாகவும் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில், தற்போது விஜயப்பிரியா ஒரு விளக்கம் கொடுத்து வீடியோ போட்டுள்ளார்.


அதில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் பேசவில்லை. இந்தியா மீதும், இந்து மதம் மீதும் நாங்கள் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளோம். நித்தியானந்தாவுக்கு எதிராகவும், கைலாசாவுக்கு எதிராகவும் சில இந்து விரோதிகள் செயல்படுகின்றனர். அதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டினோம். இவர்கள்தான் நித்தியானந்தாவுக்கு எதிராக அவர் பிறந்த பூமியில் வழக்குத் தொடர்ந்தனர்.


ஐ.நா. சபையில் நான் ஆற்றிய உரை இந்து விரோத மீடியாக்கள் சிலவற்றால் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது, திரித்துக் கூறப்பட்டுள்ளது.  வேண்டும் என்றே இதைச் செய்துள்ளனர். இவர்கள் மீது இந்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் நித்தியானந்தாவுக்கு எதிராகவும், கைலாசாவுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டுகின்றனர்.


இவர்கள் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவர்கள் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.  இப்படிப்பட்ட பிரிவினைவாதிகள் மீது இந்தியஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த விவகாரத்தில் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசாவின் நிலைப்பாடு இதுதான். இந்த விளக்கம் போதுமானதாக இருக்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார் விஜயப்பிரியா.


அய்யோ கடவுளே.. ஒன்னுமே புரியலையே..!


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்